விஷால் இப்போது பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் கதகளி படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து அவர் கொம்பன் படத்தை இயக்கிய முத்தையா இயக்கத்தில் ஒருபடம் நடிக்கவிருக்கிறார். மருது என்று பெயர் சொல்லப்பட்டிருக்கும் அந்தப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்குவதாக இருந்தது. நடிகர்சங்கத்தேர்தல் வேலைகள் காரணமாகப் படப்பிடிப்பு தொடங்குவதைக் கொஞ்சம் தள்ளிப்போட்டிருக்கிறாராம் விஷால். அதனால் அக்டோபரில் தொடங்கவேண்டிய அந்தப்படம் நவம்பர் முதல்வாரத்தில் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது. இதற்டையே படத்தில் நாயகியாக நடிக்க ஒப்புக்கொண்டிருந்த லட்சுமிமேனன் இப்போது படத்தில் இல்லை என்று சொல்லப்படுகிறது. அதற்குக் காரணம், படப்பிடிப்பு தள்ளிப்போனதால் லட்சுமிமேனன் தேதிகள் சிக்கலாகிவிட்டதென்று சொல்லப்படுகிறது.வெளியில் தெரிந்து லட்சுமிமேனன், நிறையப்படங்களில் நடிக்கவில்லை எனும்போது இந்தப்படத்தில் நடிக்காதது ஏன்? என்கிற கேளவிகள் வந்திருக்கின்றன. விஷால்தான் லட்சுமிமேனனை வேண்டாமென்று சொல்லிவிட்டதாகவும் ஒரு பேச்சு இருக்கிறது.
லட்சுமி மேனனை விஷால் தன் படத்தில் இருந்து கலற்றிவிட்டதாக கூறப்படுகிறது
October 09, 2015
0
விஷால் இப்போது பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் கதகளி படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து அவர் கொம்பன் படத்தை இயக்கிய முத்தையா இயக்கத்தில் ஒருபடம் நடிக்கவிருக்கிறார். மருது என்று பெயர் சொல்லப்பட்டிருக்கும் அந்தப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்குவதாக இருந்தது. நடிகர்சங்கத்தேர்தல் வேலைகள் காரணமாகப் படப்பிடிப்பு தொடங்குவதைக் கொஞ்சம் தள்ளிப்போட்டிருக்கிறாராம் விஷால். அதனால் அக்டோபரில் தொடங்கவேண்டிய அந்தப்படம் நவம்பர் முதல்வாரத்தில் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது. இதற்டையே படத்தில் நாயகியாக நடிக்க ஒப்புக்கொண்டிருந்த லட்சுமிமேனன் இப்போது படத்தில் இல்லை என்று சொல்லப்படுகிறது. அதற்குக் காரணம், படப்பிடிப்பு தள்ளிப்போனதால் லட்சுமிமேனன் தேதிகள் சிக்கலாகிவிட்டதென்று சொல்லப்படுகிறது.வெளியில் தெரிந்து லட்சுமிமேனன், நிறையப்படங்களில் நடிக்கவில்லை எனும்போது இந்தப்படத்தில் நடிக்காதது ஏன்? என்கிற கேளவிகள் வந்திருக்கின்றன. விஷால்தான் லட்சுமிமேனனை வேண்டாமென்று சொல்லிவிட்டதாகவும் ஒரு பேச்சு இருக்கிறது.
Tags
Post a Comment
0 Comments