Type Here to Get Search Results !

தோனிக்கு ஒன்றும் தெரியவில்லை என்று கவாஸ்கர் கூறுகிறார்




தோனிக்கு சரியான திட்டத்தை செயல்படுத்தும் திறன் இல்லை என்று கவாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார். தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.  இதில் டி20 தொடரை கைப்பற்றிய தென் ஆப்பிரிக்க அணி, இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரையும் 3-2 என்ற கணக்கில் வென்றது.  அதிலும், மும்பையில் நடந்த கடைசி ஒருநாள் போட்டி இந்திய அணிக்கு பெரிய அடியாக அமைந்து விட்டது.  இந்நிலையில் இந்திய அணித்தலைவர் தோனியிடம் சரியான திட்டம் இல்லை என்றும், திட்டங்களை செயல்படுத்தும் திறமையும் இல்லை எனவும் முன்னாள் தலைவர் கவாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார்.  மேலும், அவர் கூறுகையில், "முன்பு தோனியிடம்  பந்துவீச்சில் மாற்றம் செய்யும் திட்டங்கள் சிறப்பாக இருக்கும். ஆனால் இந்தப் போட்டியில் ஒட்டு மொத்த பந்து வீச்சாளர்களும் சொதப்பி விட்டனர்.  வான்கடே ஆடுகளம் நல்ல திருப்பம் தரக் கூடியது. ஆனால் அந்த சுழலுக்கு ஏற்ப நமது பந்து வீச்சாளர்கள் திறமையாக செயல்பட தவறிவிட்டனர்.  இந்திய பந்துவீச்சாளர்கள் டி20, ஒருநாள் தொடரில் எந்த அளவு மந்தமாக செயல்பட்டனர் என்பது அனைவருக்கும் தெரியும். இந்திய அணியில் பந்துவீச்சு பிரிவு அந்த அளவுக்கு மோசமாக உள்ளது” என்று கூறியுள்ளார்.  மேலும், "இந்திய அணியில் அஸ்வின் இல்லாதது பேரிழப்பாக மாறிவிட்டது என நினைக்கிறேன்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad