கே.வி.ஆனந்தின் அடுத்த ஹீரோ இவர்தான்







அனேகன் படத்தைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கும் படம் பற்றி நிறையச் செய்திகள் வந்துவிட்டன. அவர் அடுத்து இயக்கும்போகும் நடிகர் என்று அஜித்தில் தொடங்கி சிவகார்த்திகேயன் அதற்கடுத்து ஆர்யா அதன்பின் ஜெயம்ரவி ஆகியோருடைய பெயர்கள் சொல்லப்பட்டன. இவை எதுவுமே இல்லை.கே.வி.ஆனந்த் அடுத்து இயக்கப்போவது ஜீவாவைத்தான் என்று இப்போது சொல்லப்படுகிறது. அவர்கள் இருவரும் இணைந்து எடுக்கப்பட்ட கோ மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதனால் மீண்டும் அவர்களிருவரையும் இணைத்து படமெடுக்கப்போவது கோ படத்தைத் தயாரித்த எல்ரெட்குமார்தான் என்றும் சொல்கிறார்களாம்.  இதுதொடர்பான பேச்சுகள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது. ஜீவா இப்போது திருநாள், போக்கிரிராஜா ஆகிய இரண்டுபடங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். அவற்றின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிவடைந்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url