Type Here to Get Search Results !

மறைந்த ரசிகரின் அம்மாவைக் கட்டியணைத்து அழுத விஜய்







கடந்த ஒன்றாம் தேதி சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் புலி படம்

வெளியானது. அப்படத்தின் முதல்நாள் காட்சியை காண்பதற்காக தாம்பரம்

அருகே மணிமங்கலத்தைச் சேர்ந்த விஜய் ரசிகர்களான சவுந்தர்ராஜன்

மற்றும் உதயகுமார் இருவரும் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது லாரி

மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.  இச்செய்தி

இணையத்திலும், செய்தித்தாள்களிலும் வெளியாகி அனைவரையும்

அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இச்சம்பத்தை அறிந்த விஜய் இன்று காலை

ஆறுமணியளவில் சவுந்தர்ராஜன் மற்றும் உதயகுமார் இருவரின்

வீடுகளுக்கும் நேரில் சென்று பெற்றோரிடம் நலம் விசாரித்து ஆறுதல்

கூறியுள்ளார்.

மேலும் இருவீட்டாருக்கும் பண உதவியையும் வழங்கினார். மேலும்

அவர்களிடம் தங்கள் குடும்பத்திற்கு ஏதேனும் உதவி வேண்டும் என்றால்

தயங்காமல் என்னிடம் கூறுங்கள் கண்டிப்பாக உதவ நான் கடமைப்

பட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.


அச்சமயத்தில் அப்பகுதிகளில் உள்ள ரசிகர், ரசிகைகள், பொதுமக்கள்

விஜய்யை பார்ப்பதற்கு கூட்டமாக கூடிவிட்டனர். பின்னர் அங்கிருந்து

விடைபெற்றார் விஜய்.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad