Type Here to Get Search Results !

அஜித் ஏன் ஓட்டு போடவரவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது







பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமைகளில் படப்பிடிப்புகள் நடக்காது. அதனால்தான் ஞாயிறன்று தேர்தல் நடத்தவேண்டும் என்று வழக்குப்போட்டு வென்றனர் நாசர்அணியினர். ஆனாலும் காலை ஏழரைக்கே வந்து வாக்களித்துவிட்டுப் போனார் விஜய்.சீக்கிரமாகவே அவர் வந்ததற்குக்காரணம், அட்லி இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லி அருகே நடந்துகொண்டிருந்ததாகவும் அதில் கலந்துகொள்வதற்காகவே அவர் சீக்கிரமாக வந்து ஓட்டுப்போட்டுவிட்டுச் சென்றார் என்று சொல்லப்பட்டது.  அஜீத் முந்தைய நாள் இரவு மூன்றுமணிவரை வேதாளம் படத்தின் குரல்பதிவில் இருந்தார் என்று சொல்லப்படுகிறது. அதனால் காலையில் தூங்கிக்கொண்டிருக்கிறார் மதியத்துக்கு மேல் ஓட்டுப்போட வரலாம் என்று சொல்லப்பட்டது. ஆனால் கடைசிவரை அவர் வரவில்லை. ஓட்டுப்பதிவில் நடந்த சலசலப்புகள் காரணமாக அதிருப்தியடைந்து அவர் வரவில்லை என்றும், தனக்கு ஒரு சிக்கல் வந்த நேரத்தில் சங்கம் உதவிசெய்யவில்லை என்கிற அதிருப்தி காரணமாகவே ஓட்டுப்போட வரவில்லை என்றும் ஒரு கருத்து உலவிக்கொண்டிருக்கிறது.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad