நடிகர்சங்கத்தேர்தலில் ரஜினியின் ஆதரவு விஷால்அணிக்கா?

   









அக்டோபர் 18 ஆம் தேதி நடிகர்சங்கத்தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலில் சரத்குமார்,ராதாரவி அணியும் நாசர், விஷால் ஆகியோர் அடங்கிய அணியும் களத்தில் இருக்கின்றன. இதுவரை இல்லாத அளவில் இந்தத்தேர்தலில் போட்டி கடுமையாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.  விஷால்அணியினர் கமல், ரஜினி உள்ளிட்ட மூத்தநடிகர்களைச் சந்தித்துப்பேசி பரபரப்பைக் கிளப்பினார்கள். சரத் அணியில் சிம்பு போட்டியிடுவதாகச் சொல்லியிருக்கிறார். இந்தத்தேர்தலில் ரஜினி யார் பக்கம்? என்பது பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.  இந்நிலையில், இந்தத்தேர்தல் சம்பந்தமாக, அக்டோபர்இரண்டாம்தேதியன்று விஷால்அணியினர் ஒரு கூட்டம் நடத்துகிறார்கள். அந்தக்கூட்டம் ரஜினியின் ராகவேந்திராமண்டபத்தில் நடக்கவிருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்காக மண்டபத்தை இலவசமாகக் கொடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.  தேர்தலில் இரண்டுஅணிகள் போட்டியிடும் நேரத்தில் ஓரணிக்கு இலவசமாக மண்டபத்தைக் கொடுத்திருப்பதன் மூலம், தன்னுடைய ஆதரவு விஷால் அணியினருக்கு என்று சொல்லாமல் சொல்லுகிறாரா ரஜினி என்கிற பேச்சுகள் வரத்தொடங்கியிருக்கின்றன.  

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url