பரபரப்பில் திரையுலகம்! ரிப்போர்ட்டரை ஓங்கி அறைந்தாரா பிரியாமணி...













தேசிய விருது பெற்ற நடிகை பிரியாமணி சமீபத்தில் ஒரு ரிப்போர்ட்டரை

அறைந்ததாகச் செய்திகள் வெளியாகி மிகவும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

நடிகை பிரியாமணி உள்ளம் என்னும் படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி

பின் பாரதிராஜாவின் கண்களால் கைது செய் படம் மூலம் பிரபலமானார்.

பின் பருத்தி வீரன் படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றார்

பிரியாமணி. எனினும் பிரியாமணியால் முன்னணி நாயகிக்கான இடத்தைப்

பிடிக்க  முடியவில்லை. இடையில் படங்களே இல்லாமல் இருந்த

பிரியாமணி பாலிவுட்டின் சென்னை எக்ஸ்பிரஸ் மூலம் ஒரு பாடலுக்கு

நடனம் ஆடினார். அதற்கு பிறகாவது அவருக்கு படங்கள் வரும் என

எதிர்பார்க்க அதே நிலை தான் நிலவியது.


ஓரிரண்டு தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்தவர் தற்போது திருமணம்

செய்துகொள்ளும் முடிவில் இருப்பதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் தான் ஒரு தெலுங்கு ரிப்போர்ட்டர் பிரியாமணியிடம் ஏன்

ஐட்டம் பாடலில் எல்லாம் ஆடுகிறீர்கள், திரையில் தோன்றுவதற்காக இந்தப்

பாடலை ஓகே என சொல்லிவிட்டீர்களா எனக் கேட்க இதில் எரிச்சல்

அடைந்த பிரியாமணி ரிப்போர்ட்டரை அடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் ஒரு கேள்வியைக் கேட்கும் முன் யோசித்து கேளுங்கள் என

கூறியதாகவும் சொல்லப்படுகிறது.  இது தெலுங்கு சினிமா உலகில் பரபரப்பை

ஏற்படுத்தியுள்ளது. தற்சமயம் இரு கன்னடப் படங்களில் நடித்து வரும்

பிரியாமணி தெலுங்கில் பன்னி படத்தில் ஒரு  குத்துப் பாடலுக்கு

ஆடவிருக்கிறார். இதைக் கேட்கப்போய்த்தான் ரிப்போர்ட்டர் அடி

வாங்கியதாகச் சொல்லப்படுகிறது.




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url