மண்ணீரல் மற்றும் கல்லீரல் நோய், வீக்கம் குணப்படுத்தும் கொழிஞ்சில் இலை


                              கொழிஞ்சில்(சரபுங்கா)
                                 (Tephrosia Purpurea)

அமைப்பு 


                   
        இது ஒருகை உயரத்திற்கு சற்று அதிகமாக வளரும். இதற்குப் பல கிளைகள் உண்டு. இதில் வெள்ளை, சிவப்பு என இரு வகைகள் உண்டு. சிவப்பு நிறமுள்ளதை விட வெண்மை நிறமுள்ளதின் இலைகள் சிறியவையாக இருக்கும். வெள்ளை நிறமுள்ளது நிலத்தில் படர்ந்திருக்கும். காய்களில் 5, 6  விதைகள் இருக்கும். சிவப்பு, வெண்மை வகைச் செடிகளில் மேலும் சில வகைகள் உண்டு.

தன்மை 
                  கசப்பு துவர்ப்புச் சுவைகள் கொண்டிருக்கும். இலேசானது. சடராக்கினியை வளர்க்கும்.

பயன் 
                  இதன் இலை வேர் விதைகள் மருந்துப் பொருளாகப் பயன்படுகின்றன.

தீர்க்கும் நோய்கள் 
                  மண்ணீரல் வீக்கம், கல்லீரல் நோய், குன்மம், விரணம், நஞ்சு, இருமல்,  இரத்த தோஷம் இழுப்பு, காய்ச்சல் என்பனவற்றைப் போக்கும்.




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url