Type Here to Get Search Results !

மீண்டும் மோதலில் அஜித் - விஜய் ரசிகர்கள்!


                                            புலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய பேச்சும், டி.ஆர் பேசிய பேச்சும் அதைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் பல ஊர்களில் அடித்து ஒட்டியுள்ள போஸ்டர்களும் மீண்டும் அஜித், விஜய் ரசிகர்களிடையே ஒரு மோதலை உருவாக்கி உள்ளது. அந்த விழாவில் விஜய் பேசும் போது "பொய்யாக யாரையும் நேசிக்க மாட்டேன். அடுத்தவர்களுக்கு தீமை செய்யாமல் இருக்க வேண்டும்,” என்று பேசியதில் ஏதோ ஒரு உள்குத்து இருப்பதாகவே அஜித் ரசிகர்கள் நினைக்கிறார்கள். மேலும், அதே விழாவில் டி.ஆரை ஏறக்குறைய தன்னுடைய கொள்கை பரப்புச் செயலாளர் ஆகவே விஜய் மேடை ஏற்றியிருக்கிறார் என்றும் சிலர் சொல்கிறார்கள். சாதாரணமாகவே அடுக்கு மொழியில் பேசும் டிஆர், தன்னுடைய மகன் நடித்து பிரச்சனையில் சிக்கியுள்ள வாலு படம் வெளிவருவதற்கு உதவி செய்துள்ள விஜய்யைப் பற்றி எப்படிப் பேசுவார். விஜய்யை ஆதரிக்கிறேன் என, மறைமுகமாக அஜித்தை எதிர்க்கும் தொனியில் அவர் சில வார்த்தைகளைப் பயன்படுத்தியதையும் அஜித் ரசிகர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். அஜித் எப்போதுமே இது மாதிரியான சர்ச்சைகளில் சிக்குவதில்லை. சிம்பு இதுநாள் வரை தன்னை அஜித் ரசிகராக வெளிப்படையாகவே காட்டிக் கொண்டிருக்கிறார். அதே சமயம், விஜய்யும், சிம்புவும் அண்ணன் தம்பிகள் என டி.ஆர் பாசமழை பொழிந்திருக்கிறார். இந்த சர்ச்சையில் அடுத்து டிஆருக்கு எதிராகவும், சிம்புவுக்கு எதிராகவும் பாய அஜித் ரசிகர்கள் தயாராக உள்ளதாகத் தெரிகிறது. ஏற்கெனவே தீவிரமான அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களிலும், ஊர்களிலும் அவர்களுடைய எதிர்ப்புக் குரலை ஆவேசமாகக் காட்டி வருகிறார்கள். வாலு என்று பெயர் வைத்த நேரம் பல்வேறு ரூபங்களில் அந்தப் படத்திற்கு பிரச்சனை வளர்ந்து கொண்டே வருகிறது. இப்போது புதிதாக அஜித், விஜய் ரசிகர்கள் மோதலில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad