Type Here to Get Search Results !

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் பிரமாண்டம் !




                                                    ரஜினி முருகன் படத்தையடுத்து சிவகார்த்திகேயன் அடுத்து அவருடைய நண்பரான ஆர்.டி.ராஜாவின் தயாரிப்பில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் பூஜை நேற்று அவர்களுடைய அலுலவகத்தில் மிகவும் எளிமையாக நடைபெற்றது. படக்குழுவினரைத் தவிர வேறு யாரும் அந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. சிவகார்த்திகேயனை வைத்து இதற்கு முன் படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர்களும், படங்களை இயக்கிய இயக்குனர்களும் கலந்து கொண்டதாகத் தெரியவில்லை. அதோடு படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களாக இந்தியாவின் முன்னணிக் கலைஞர்கள்ன ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி ஆகியோர் இந்தப் படத்தில் இடம் பெற்றிருப்பது பல முன்னணி நடிகர்களைக் கூட ஆச்சரியப்படுத்தியுள்ளது. இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டதில் ஆச்சரியமில்லை. சிவகார்த்திகேயனே தன்னுடைய நெருங்கிய நண்பர்களில் அனிருத் ஒருவர் என சமீபத்தில்தான் கூறியிருந்தார். ஆனாலும், சிவகார்த்திகேயன் - அனிருத் இணைந்த மான் கராத்தே, காக்கி சட்டை படங்களை விட சிவகார்த்திகேயன் - இமான் கூட்டணி இணைந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களின் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. அப்படியிருக்க இமானை விட அனிருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்கள். தொழில்நுட்பக் கலைஞர்கனை இந்தியாவின் சிறந்த கலைஞர்களைத் தேர்ந்தெடுத்துவிட்டு படத்தின் நாயகியை முன்னணி நடிகை ஒருவரைத் தேர்ந்தெடுத்தால் தான் படத்திற்கும் இமேஜாக இருக்கும். அந்த விதத்தில் தற்போதைய முன்னணி நடிகைகளில் சிவகார்த்திகேயனுடன் இதுவரை நடிக்காத நயன்தாரா, காஜல் அகர்வால், ஸ்ருதிஹாசன், சமந்தா ஆகியோரில் ஒருவர்தான் நாயகியாக தேர்ந்தெடுக்கப்படலாம் என்கிறார்கள். இவர்கள் அனைவருமே ஏற்கெனவே தனுஷுடன் ஜோடி சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad