Type Here to Get Search Results !

சிம்பு பட சிக்கலை தீர்க்க உதவிய விஜய் !


                                            சிம்பு, ஹன்சிகா நடித்திருக்கும் ‘வாலு’ படம் கடந்த 17ம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்தது. இதற்கிடையில் பட ரிலீஸுக்கு எதிராக மேஜிக் ரேய்ஸ் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. படத்தை ரிலீஸ் செய்ய கோர்ட் இடைக்கால தடை விதித்தது. இதற்கிடையில் பேட்டி அளித்த டி.ராஜேந்தர், ‘என் மகன் சிம்புவுக்கு எதிராக திரையுலகில் சிலர் சதி செய்கின்றனர். கோர்ட் உத்தரவுக்கு தலைவணங்குவேன்’ என்றார். பட பிரச்னை தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் சமரசம் பேசி வந்தார் டி.ராஜேந்தர். இப்பிரச்னைபற்றி தகவல் அறிந்த நடிகர் விஜய் உதவ முன்வந்தார். படத்தின் ஒரு ஏரியா விநியோக உரிமையை வாங்குவதாக கூறியதுடன் பெரும் தொகை ஒன்றையும் வழங்கினார். இதையடுத்து ‘வாலு’ பிரச்னை முடிவுக்கு வந்திருக்கிறது. இதையடுத்து விஜய்க்கு டி.ராஜேந்தர் நன்றி தெரிவித்தார். ‘புலி படத்துக்காக டி.ராஜேந்தர் ஸ்டுடியோவில் செட் போடப்பட்டது.

                                            செட் போடும் நாள், பிரிக்கும் நாள் ஆகியவற்றுக்கும் எல்லா நாட்களுக்கும் அவர்களிடம் வாடகை தர வேண்டும் என கேட்டிருந்தேன். அதை மனதில் கொள்ளாமல் விஜய் உதவினார். அவர்களிடம் வாடகை கேட்டது தவறோ என்று இப்போது வருந்துகிறேன்’ என டிராஜேந்தர் சக நண்பர்களிடம் கூறினாராம். பிரச்னை முடிவுக்கு வந்ததையடுத்து வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வாலு படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கின்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad