Type Here to Get Search Results !

ரோஜர் பெடரர் காலிறுதியில் இருந்து வெளியேறினார்





                     ரோஜர் பெடரர் 2009-ல் சாம்பியன் பட்டம் வென்ற பொழுது ,அவர் ஆடிய 18 ஆட்டங்களில் இரண்டில் மட்டுமே தோற்றிருக்கிறார்.ஆனால் இன்று  சூசென் லென்க்லன் ஆடுகளத்தில் ஸ்விட்ச்சர்லாந்தை சேர்ந்த ஸ்டேன் வவ்ரின்காவிடம் போராடி தோற்றார்.17 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற ரோஜர் பெடரருக்கு, கிராண்ட்ஸ்லாம்-லிருந்து வெளியேற்றப்படுவது இது மூன்றாவது முறையாகும்.2012 விம்பிள்டன் பட்டத்தை வென்றபொழுது,அவர் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று  மூன்று வருடங்கள் ஆகிவிட்டது.

                     நேற்று   நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ,ரோஜர் பெடரர் சுவிச்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஸ்டான் வாவ்ரின்கா-வை எதிர்கொண்டார் .இந்த ஆட்டத்தில் ,ஸ்டான் முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினார்.இரண்டாவது செட்டிலும் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

    இறுதியாக,இடைவெளி இல்லாமல் மூன்றாவது சுற்றில் இருவரும்  ஆக்ரோஷமாக ஆடினார்கள்.டை-பிரேக்கரில் 7-6(7-4) என்ற கணக்கில் ஸ்டான் ஆட்டத்தை முடித்து வைத்தார்.நேற்றைய   ஆட்டத்தில் ஸ்டான் வாவ்ரின்கா சிறப்பாக ஆடினார்.அவர் ஆடிய ஆட்டங்களிலே மிகச் சிறந்த ஆட்டமாக அவர் இதைக் கருதினார்.


ச  கதிரேசன் 

               

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad