Type Here to Get Search Results !

இந்தோனேசியா ஓபன் : சாய்னா நெவால்,காஷ்யப் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்;பி வி சிந்து வெளியேறினார்

  






     பெண்களுக்கான ஒற்றையர் ஆட்டத்தில் நேற்று ஜகார்தாவில் நடைபெற்ற இந்தோனேசிய சூப்பர் சீரீஸ் பாட்மிண்டன்-ல் உலகின் முதல் நிலை நிலை வீராங்கனை சாய்னா ,அவரை எதிர்கொண்ட தாய்லாந்தின் நிகோவான் ஜிண்டாப்பன்-ஐ 21-16,21-18 என்ற செட்களில் தோற்கடித்தார்.சாய்னாவின் சிறந்த ஆட்டங்களில் ஒன்றாக அவர் நிகோவான்-ஐ 35 நிமிடங்களில் ஆட்டத்தை கைப்பற்றினார்.

              மற்றொரு ஆட்டத்தில் ,பி வி சிந்து சீன வீராங்கனை யா சிங் சூ -வை எதிர்கொண்டார்.சிந்து தனது முதல் ரவுண்டில் 21-16,15-21,14-21 என்ற கணக்கில் சூ -விடம் தோற்று ,இந்த தொடரிலிருந்தே வெளியேறினார்.
அடுத்த காலிறுதிக்கான  ஆட்டத்தில் இடம்பெறுவதற்கு சாய்னா ,சீன வீராங்கனை சிங் சூ -வை எதிர்கொள்கிறார்.

   ஆண்களுக்கான ஒற்றையர் ஆட்டத்தில்,இந்தியாவின் பருபாலி காஷ்யப் தாய்லாந்தின் டனொன்க்சக் சேன்சோம்ப்சக் -ஐ 21-17,21-7 என்ற கணக்கில் 29 நிமிடங்களில் தோற்கடித்தார்.அடுத்த ஆட்டத்தில் காஷ்யப் கொரிய வீரர் வான் ஹோ சன் -ஐ எதிர்கொள்கிறார்.


ச கதிரேசன் 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad