டேவிஸ் கோப்பை போட்டியில் இருந்து லியாண்டர் வெளியேறினர்




                  டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஆசிய–ஓசியானா பிரிவின் 2–வது சுற்று ஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது. இந்த ஆட்டம் கிறைஸ்ட்சர்ச்சில் அடுத்த மாதம் (ஜூலை) 17–ந் தேதி முதல் 19–ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய டென்னிஸ் அணியை இந்திய டென்னிஸ் சம்மேளனம் நேற்று அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு பெங்களூருவில் நடந்த உலக சுற்று பிளே–ஆப் ஆட்டத்தில் செர்பியாவுக்கு எதிராக களம் கண்ட சீனியர் வீரர் லியாண்டர் பெயஸ் போட்டியில் இருந்து விலகி உள்ளார். சோம்தேவ்வர்மன் தலைமையிலான இந்திய அணியில் யுகி பாம்ப்ரி, ரோகன் போபண்ணா, சகேத் மைனெனி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். தமிழக வீரர் ராம்குமார் ராமநாதன் மாற்று வீரராக அணியில் இடம் பிடித்துள்ளார். இந்தியா–நியூசிலாந்து அணிகள் இதுவரை 7 முறை மோதி இருக்கின்றன. இதில் இந்திய அணி 4 முறை வெற்றி பெற்றுள்ளது. 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url