Type Here to Get Search Results !

போலீசிடம் சிக்கிய ‘கோபா’ வீரர்



 


                                                                  குடித்து விட்டு கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சிலி கால்பந்து வீரர் ஆர்டுரோ விடாலை போலீசார் கைது செய்தனர்.

                                                                 சிலியில் கோபா அமெரிக்க கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் இதுவரை நடந்த போட்டிகளில் அதிக கோல் அடித்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் (3 கோல், 2 போட்டி) உள்ளவர் சிலி வீரர் ஆர்டுரோ விடால், 28.

                                                                 மெக்சிகோ அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்ற இவர் (2 கோல்), பின் மது அருந்தி, மனைவி மரியாவுடன் தனது ரூ. 2.3 கோடி மதிப்புள்ள பெராரி காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே வந்த கார் மீது பலமாக மோதியதில், முன்பகுதி பலத்த சேதமடைந்தது.

                                                               இதில் இருவருக்கும் லேசான சிராய்ப்பு ஏற்பட, மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிகிச்சைக்குப் பின் மனைவி வீடு திரும்ப, குடித்து விட்டு கார் ஓட்டிய ஆர்டுரோவை போலீசார் கைது செய்தனர்.

                                                              கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்ட இவர், பிறகு ஜாமினில் விடுவிக்கப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து ஆர்டுரோ கூறுகையில்,‘‘ இன்று கார் விபத்தில் சிக்கிக் கொண்டேன். இதில் எனது தவறு எதுவும் இல்லை. நானும் எனது குடும்பத்தினரும் நலமாக உள்ளோம்,’’ என்றார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad