அரையிறுதியில் போபண்ணா ஜோடி






                                                                ஜெர்ரி வெபர் ஓபன் டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவு அரையிறுதிக்கு இந்தியாவின் ரோகன் போபண்ணா, ருமேனியாவின் புளோரின் மெர்ஜியா ஜோடி முன்னேறியது.

                                                                 ஜெர்மனியில் உள்ள ஹாலே நகரில், ஜெர்ரி வெபர் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ருமேனியாவின் புளோரின் மெர்ஜியா ஜோடி, குரோஷியாவின் மரின் டிராகன்ஜா, பின்லாந்தின் ஹென்றி கான்டினன் ஜோடியை சந்தித்தது.

                                                                 அபாரமாக ஆடிய போபண்ணா, மெர்ஜியா ஜோடி 7–6, 7–6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url