தேவையான பொருட்கள் :
- துளிர் வெற்றிலை --- 5
- புளி --- எலுமிச்சம்பழ அளவு
- ஓமம் --- 1 ஸ்பூன்
- மிளகாய் --- 2
- மிளகு --- 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை --- 2 ஆர்க்குகள்
- நெய் --- 1 டீ ஸ்பூன்
- மஞ்சள் தூள் --- 1 சிட்டிகை
- பெருங்காயத் தூள் --- 1/4 டீ ஸ்பூன்
- கடுகு --- 1/2 டீ ஸ்பூன்
- உப்பு --- தேவையானது.
செய்முறை :
- புளியை கெட்டியாக கரைத்து எடுக்கவும்.இத்துடன் உப்பு,மஞ்சள் தூள்,பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.தேவையான அளவு தண்ணீர் விடவும்.(1 கப்)
- வெற்ற்லை,ஓமம்,மிளகாய்வற்றல்,மிளகு சேர்த்து அரைத்து புளிக்கரைசலில் விடவும்.எல்லாம் ஆக சேர்த்து கொதிக்கும் போது தீயை நிறுத்தி விடவும்.
- நெய்யை சூடாக்கி கடுகு,மிளகாய் வற்றல் தாளித்து ரசத்தில் சேர்க்கவும்.
நன்மைகள் :
பசியைத் தூண்டி செரிமானத்திற்கு உதவுகிறது.சளியை வெளித்தள்ளும்.
Post a Comment
0 Comments