"4000 தியேட்டர்களில் வெளியாகிறது பாகுபலி...!"





                                                       எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யாகிருஷ்ணன் என தெலுங்கு மற்றும் தமிழ்த்திரைப்படத்துறையைச் சேர்ந்த நட்சத்திரக்கூட்டமே நடித்திருக்கும் பாகுபலி படம் அடுத்த மாதம், அதாவது ஜூலை 10 அன்று வெளிவர உள்ளது. பாகுபலி படம் வெள்ளித்திரைக்கு வர இன்னும் சில தினங்களே உள்ளநிலையில் நாளை இப்படத்தின் ஆடியோ(தமிழ்) வெளிவர உள்ளது. தெலுங்கில் ஏற்கனவே ஆடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுவிட்டநிலையில் தமிழ்ப்பாடல்களை நாளை வெளியிடுகின்றனர். இன்னொரு பக்கம், படத்தின் வெளியீட்டு பணிகள் பரபரப்பான கட்டத்தை எட்டி உள்ளன.பாகுபலி படம் சில தினங்களுக்க முன் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது.

                                               தெலுங்கு வெர்ஷனுக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அங்கே வரிவிலக்கு பஞ்சாயத்து எல்லாம் கிடையாது என்பதால் யு/ஏ சான்றிதழை சந்தோஷமாக வாங்கிக் கொண்டு அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். தற்போது கிடைத்த தகவலின்படி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் ஒரே நாளில் 4000 தியேட்டர்களில் வெளியாகிறது - பாகுபலி. தமிழில் மட்டும் 500 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யும் எண்ணத்தில் தியேட்டர்களை புக் பண்ணி வருகிறார் ஞானவேல்ராஜா.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url