Type Here to Get Search Results !

மாநில எல்லைகளில் ஆய்வு: இ-பாஸ் பெறாமல் வருபவர்களை அனுமதிக்கக்கூடாது; அனைத்து ஊராட்சிகளிலும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிகளை தொடங்க வேண்டும் - கலெக்டர்

மாநில எல்லைகளில் ஆய்வு: இ-பாஸ் பெறாமல் வருபவர்களை நீலகிரிக்குள் அனுமதிக்கக்கூடாது அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவு
ஊரடங்குக்கு மத்தியில் இ-பாஸ் பெற்று வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரிக்குள் வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் அனுமதியின்றி கேரளாவில் இருந்து கூடலூர் வழியாக கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு வடமாநில தொழிலாளர்கள் சரக்கு லாரிகளில் பதுங்கியவாறு செல்கின்றனர். இதை தடுக்க மாநில எல்லைகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, கூடலூர் பகுதியில் உள்ள மாநில எல்லைகளில் ஆய்வு நடத்தினார். கூடலூர்- கேரள எல்லையான நாடுகாணியில் உள்ள சோதனைச்சாவடியில் ஆய்வு செய்த பிறகு அதிகாரிகளிடம் கலெக்டர் கூறியதாவது:-

கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை முறையாக சோதனை செய்ய வேண்டும். தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்க வேண்டும். வாகன டிரைவர்களின் உடல் வெப்பத்தை பரிசோதித்த பின்னரே கூடலூருக்குள் அனுமதிக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு காய்ச்சல், இருமல் உள்ளதா? என பரிசோதிக்க வேண்டும். இ-பாஸ் பெறாமல் வருபவர்களை நீலகிரிக்குள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக்கூடாது. சோதனைச்சாவடிகளில் பணியாற்றும் அனைத்து துறை அதிகாரிகளும், அலுவலர்களும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அங்குள்ள பேக்கரி, டீக்கடையில் கலெக்டர் ஆய்வு நடத்தினார். அப்போது டீக்கடை நடத்தி வந்த ஒரு பெண்ணிடம், வாடிக்கையாளர்கள் டீ கேட்டால் என்ன சொல்வீர்கள் என்று அவர் கேட்டார். அதற்கு அந்த பெண், பார்சல் டீ மட்டுமே வழங்குவோம் என்று கூறுவேன் என்று விளக்கம் அளித்தார்.

பின்னர் கூடலூர் நகர பகுதியில் கலெக்டர் ஆய்வு நடத்தினார். அப்போது கடைகளில் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். பின்னர் கூடலூர்- கர்நாடகா எல்லையான கக்கநல்லாவில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு நடத்தினார். அப்போது அனைத்து வாகனங்களையும் முறையாக சோதனை செய்ய வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின் போது கூடலூர் ஆர்.டி.ஓ. ராஜ்குமார், தாசில்தார் சங்கீதாராணி, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஜனார்த்தனன் உள்பட அலுவலர்கள், வருவாய் துறையினர் உடன் இருந்தனர். முன்னதாக தேவர்சோலை பேரூராட்சி கவுன்டங்கொல்லி ஆதிவாசி காலனிக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா சென்று, அங்கு கட்டப்பட்டுள்ள வீடுகளை பார்வையிட்டார். பின்னர் அங்குள்ள 120 ஆதிவாசி குடும்பங்களுக்கு அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். இதில் பேரூராட்சி செயல் அலுவலர் வேணுகோபாலன் உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அனைத்து ஊராட்சிகளிலும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிகளை தொடங்க வேண்டும்; கலெக்டர்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சிகளில் பணிகளை தொடங்கிட வேண்டும். பணிகள் தொடங்காமல் உள்ள ஊராட்சிகளில் உடனடியாக பணிகளை தொடங்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் கூடுதல் பணியாளர்களை கொண்டு பணிகளை தொடங்க வேண்டும்.

கிராமப்பகுதிகளில் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்க ஒவ்வொரு தொகுப்பிலும் 50 முதல் 100 பணியாளர்களை பணியில் ஈடுபடுத்த அறிவுறுத்தப்பட்டது. மேலும் கிராமப்பகுதிகளில் பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கூரை மற்றும் அதன் மேல்நிலைகளில் உள்ள பணிகளை விரைந்து மேற்கொள்ள பயனாளிகளை ஊக்குவிக்க வேண்டும்.

தனிநபர் இல்ல கழிவறை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். சாலைப்பணிகளை செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் கவனித்து தரமான முறையில் போட வேண்டும். கோடைக்காலத்தை சமாளிக்க குடிநீர் பணிகை-ளை தங்கு தடையின்றி செய்திட வேண்டும். கடந்த ஆண்டு குடிமராமத்து பணிகளில், நீர் நிலைகளில் நீர்த்தேங்கி இருந்தால் நடப்பாண்டில் அதை சரி செய்து முடிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் அன்புசெல்வன் கூறினார். கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் ராஜகோபால் சுங்கரா, செயற்பொறியாளர்கள் பிரபாகரன், செல்வக்குமார் மற்றும் மண்டல அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad