இயக்குனரை புலம்ப வைத்த அந்த பிரபல நடிகர்?

 சமூக வலைத்தளத்தில் பிரபல நடிகர் ஒருவரை ''துரோகி'' என இயக்குனர் விக்ரம் சுகுமாரன் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

''மதயானை கூட்டம்’' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனரானவர் விக்ரம் சுகுமாரன், பின்பு சாந்தனு நடித்த ''ராவண கூட்டம்'' என்ற படத்தை இயக்கினார். இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாகவும், ரசிகர்கள் இடையேயும் நல்ல பெற்றாலும், வசூல் ரீதியாக பெரிதாக போகவில்லை.

தற்போது, இயக்குனர் விக்ரம் சுகுமாரன், சமூக வலைதள பக்கத்தில்: "மதயானை கூட்டம் திரைப்படம் ரிலீஸ் ஆன பின்பு எனக்கு வேறு பட வாய்ப்புகள் வரவில்லை. நானும் அழைக்கவில்லை என்று நினைத்தேன். ஆனால் வந்த வாய்ப்புகளை எல்லாம் ஒரு நடிகர் தடுத்து இருக்கிறார் என்று இப்போது தான் தெரிந்து கொண்டேன். அவன் வேறு யாரும் அல்ல, அவனை நான் தான் நடிகன் ஆக்கினேன், பச்சை துரோகி, கைக்கூலியாக என் எதிரிக்கு செயல்பட்டு இருக்கிறான். இதனை கேட்டதில் இருந்து ஆண்டவன் மீது ஆத்திரம் வருகிறது. ஆத்திரப்பட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை" என்று பதிவு செய்துள்ளார்.

பெரும் அதிர்ச்சியை கோலிவுட்டில் இந்த பதிவு ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர் குறிப்பிட்டுள்ள அந்த நடிகர் யார் என்பது குறித்து சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url