கார்த்திக்கு கிடைத்த அந்த அதிர்ஷ்ட வாய்ப்பு !

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் கார்த்தி ஜப்பான் மற்றும் மெய்அழகன் படத்திற்கு பிறகு சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இயக்குநர் மணிரத்னத்திடம் ‘ஆயுத எழுத்து’ என்ற திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார் கார்த்தி. அப்போதில் இருந்தே கார்த்திக்கு பல பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன. 

இந்த சூழ்நிலையில் இவருக்கு மறுபடியும் மார்க்கெட்டை உயர்த்தி கொடுத்தது மெய்யழகன் படம்.  இந்த நிலையில் இவர் அடுத்ததாக மாரி செல்வராஜுடன் கூட்டணி போட போகிறார்.   மாரி செல்வராஜ் அடுத்ததாக கார்த்தியை வைத்து புதிய படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது மாரி செல்வராஜின் தந்தையுடைய வாழ்க்கை கதை என்பதை பிரின்ஸ் பிச்சர்ஸ் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url