Type Here to Get Search Results !

ஓவர் நைட்ல பேமஸ் ஆய்ட்டியே பா BSNL !!!!! ஆமாங்க வெறும் ரூ1299 ரீசார்ஜ் ல தினமும் 22GB டேட்டா கிடைக்குது !!!!! offer o offer !!!



பிஎஸ்என்எல் என்று நன்கு அறியப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் தனது வாடிக்கையாளர்களுக்காக புதிய பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் நாட்டில் உள்ள தனது பயனர்களுக்காக புதிய 22 ஜிபி CUL பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த பிராட்பேண்ட் திட்டம் ரூ.1,299 என்கிற விலையுடன் வருகிறது, இது ஜூலை 1, 2020 முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த பேக் ஒரு நாளைக்கு 22 ஜிபி டேட்டாவையும் 10 எம்.பி.பி.எஸ் வேகத்தையும் வழங்குகிறது. தினசரி வரம்பு முடிந்ததும், பயனர்கள் 2Mbps வேகத்தின் கீழ் இணையத்தை அனுபவிக்க முடியும்.

மேலும் இந்த பேக் மாதாந்திர மற்றும் வருடாந்திர அடிப்படையில் கிடைக்கிறது. மாதந்தோறும், பயனர்கள் ரூ.1,299 செலவழிக்க வேண்டும். இருப்பினும், வருடாந்திர திட்டத்துடன், பயனர்கள் ரூ.12,990 செலுத்த வேண்டும், இதனால் மாதாந்திர திட்டத்துடன் ஒப்பிடும்போது ரூ.2,595 சேமிக்கப்படுகிறது.

இந்த பிராட்பேண்ட் திட்டம் 2 ஆண்டு மற்றும் 3 ஆண்டு முன்கூட்டியே கட்டணம் செலுத்தும் விருப்பத்திற்கும் கிடைக்கிறது. 2 ஆண்டு திட்டம் ரூ.24,681 க்கும், மற்றும் 3 ஆண்டு திட்டம் ரூ.36,372 க்கும் அணுக கிடைக்கிறது. இந்த திட்டம் அந்தமான் மற்றும் நிக்கோபார் வட்டம் தவிர அனைத்து தொலைத் தொடர்பு வட்டங்களிலும் கிடைக்கிறது. மேலும் இந்த திட்டம் ஒரு மின்னஞ்சல் முகவரி மற்றும் 1 ஜிபி க்ளவுட் ஸ்டோரேஜ் உடன் ஒரு இலவச அக்கவுண்டையும் வழங்குகிறது.

இதற்கிடையில் பி.எஸ்.என்.எல் அதன் ப்ரீபெய்ட் திட்டங்களுக்கான மல்டி ரீசார்ஜ் எனும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியது. இது நிறுவனத்தின் ப்ரீபெய்ட் சந்தாதாரர்கள் தங்களது தற்போதைய திட்டம் காலாவதியாகும் வரை காத்திருக்காமல் முன்கூட்டியே தங்கள் அக்கவுண்ட்களை ரீசார்ஜ் செய்ய அனுமதிக்கும் ஒரு வசதியாகும்.

இந்த புதிய வசதியானது பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் வவுச்சர் (பி.வி) மற்றும் ஸ்பெஷல் டேரிஃப் வவுச்சர் (எஸ்.டி.வி) என ரூ.97 முதல் ரூ.1,999 வரை நீளும் அனைத்து திட்டங்களுக்கும் அணுக கிடைக்கும்.

இந்த வசதி வாடிக்கையாளர்களுக்கு நீட்டிக்கப்பட்ட நன்மைகள் மற்றும் சேவைகள் கிடைப்பதை உறுதிசெய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

3 ஜிபி அளவிலான அதிவேக டேட்டா மற்றும் 100 நிமிடங்கள் குரல் அழைப்பு நன்மைகளை வழங்கும் பிஎஸ்என்எல் ரூ.94 மற்றும் ரூ.95 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகமான சில நாட்களுக்கு பிறகு இந்த புதிய மல்டி ரீசார்ஜ் வசதி அறிமுகமாகி உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

பி.எஸ்.என்.எல் வழங்கும் புதிய மல்டி ரீசார்ஜ் வசதியானது நிறுவனத்தின் ரூ.97, ரூ.98, ரூ.118, ரூ.187, ரூ.247, ரூ.319, ரூ.399, ரூ.429, ரூ.485, ரூ.666, ரூ.699, ரூ.997, ரூ.1,699, மற்றும் ரூ.1,999 ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு பொருந்தும்.

நாட்டின் அனைத்து தொலைத் தொடர்பு வட்டங்களிலும் இந்த புதிய வசதி அணுக கிடைப்பதை பிஎஸ்என்எல் உறுதிப்படுத்தி உள்ளது. தற்போதுள்ள திட்டம் காலாவதியான பிறகு சந்தாதாரரால் செய்யப்பட்ட அட்வான்ஸ்டு ரீசார்ஜ் தானாகவே ஆக்டிவேட் ஆகும் என்றும், எஸ்எம்எஸ் செய்தி மூலம் சந்தாதாரர்களுக்கு இந்த வசதி குறித்து தெரிவிக்கப்படும் என்று பிஎஸ்என்எல் கூறியுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad