தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்!
Mother's Day 2020 | அன்னையர் தினத்தில் அம்மாவை சர்ப்ரைஸ் செய்ய இந்த இடங்களுக்கு அழைத்துச் செல்லலாம்!
அம்மாவிற்கு எது செய்தாலும் ஈடு இணையில்லை. ஆனால் அவர்களுக்காக நீங்கள் மெனக்கெடும் சிறு விஷயம் கூட மலையளவுதான். அப்படியான மகிழ்ச்சியை அம்மாவுக்கு கொடுக்க வேண்டுமெனில், இந்த இடங்களுக்கெல்லாம் கூட்டிச் சென்று சர்ப்ரைஸ் செய்யுங்கள்.
ரிஷிகேஷ் : மலைகளும், பள்ளத்தாக்குகளும் சூழ இயற்கை வாழும் இடம். சுற்றிப்பார்க்க கோவில்கள், விளையாட்டு போன்ற ஃபன் ஆக்டிவிடீஸிற்கு நீர் வீழ்ச்சி, நதிநீர், அமைதியான இடம் என பார்ப்பதற்கே கண்கவர் அழகுடன் இருக்கும் ரிஷிகேஷிற்கு அழைத்துச் சென்று அம்மாவை மகிழ்விக்கலாம்.
லாந்தோர் : பச்சை பசேலென குளிரும் புகை மண்டலங்களுக்கு நடுவே ஓர் அனுபவத்தை உங்கள் அம்மாவிற்குக் கொடுங்கள். அமைதியான மனதிற்கு நிம்மதியான ஒரு சூழல் இங்கு நிச்சயம் கிடைக்கும். இங்கிருக்கும் கட்டிடங்கள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்கள் மிகவும் பிரசித்திபெற்றவை.
குலு மனாலி : வாழ்க்கையில் இதுபோதும் என்கிற திருப்தியை ஏற்படுத்தும் இடம்தான் மனாலி, இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள இந்தப் பகுதி முற்றிலும் காடுகளும், மலைகளும், பனிப் பிரதேசங்களானவை. எப்போதும் வீட்டை நினைத்தே சதா கவலைப்படும் அம்மாவை இங்கு அழைத்துச் சென்றால் ஆனந்தமாக இருப்பார்கள்.
கோவா : உங்கள் அம்மாவுக்கு பீச்சை ரசிக்கும் ஆர்வம் இருந்தால், கடற்கரையின் இளவரசியான கோவாவிற்கு அழைத்துச் செல்லலாம். மெரினா, பெசண்ட் நகர் என இங்கேயே கடலை ரசித்தவருக்கு அங்கிருக்கும் கண்ணாடிப் பளிங்கு போன்ற பீச் அவர்களுக்கு புது அனுபவமாக இருக்கும்.
Post a Comment
0 Comments