Type Here to Get Search Results !

தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மட்டும் மேலும் 786 பேருக்கு கொரோனா; தமிழக மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டோர் விவரம் வெளியீடு

தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மட்டும் 786 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. சீனாவின் வூகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. இதனிடையே உலகளவில் உயிரிழப்பானது இரண்டு லட்சத்தை தாண்டியுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 786 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,753ஆக உயர்வு

சென்னையில் மட்டும் இன்று 569 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,364ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 846 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7,128ஆக உயர்வு

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 4 பேர் இன்று உயிரிழப்பு

தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 98ஆக உயர்வு

மகாராஷ்டிராவிலிருந்து சொந்த ஊர் திரும்பியவர்களில் மேலும் 66 பேருக்கு கொரோனா உறுதி

டெல்லியிலிருந்து வந்த 13 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதியானது

மேற்குவங்கத்திலிருந்து வந்த 6 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதியானது

ஆந்திராவிலிருந்து வந்த 2 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதியானது

குஜராத், ம.பி., ஒடிசா, தெலங்கானா மாநிலங்களிலிருந்து வந்த தலா ஒருவருக்கு கொரோனா

பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் 36 நாட்களுக்குப் பிறகு ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 40 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி

திருவள்ளூர் மாவட்டத்தில் 39 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதியானது

மராட்டியத்தில் இருந்து திருநெல்வேலி திரும்பியோரில் 17 பேருக்கு இன்று கொரோனா உறுதி

மராட்டியத்தில் இருந்து விருதுநகர் திரும்பியோரில் 14 பேருக்கு இன்று கொரோனா உறுதி

டெல்லியில் இருந்து விருதுநகர் திரும்பியோரில் 12 பேருக்கு இன்று கொரோனா உறுதி

திருநங்கைகள் 2 பேருக்கு இன்று கொரோனா பெருந்தொற்று உறுதியாகியுள்ளது

இதுவரை 5 திருநங்கைகள் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை டீனுக்கு இன்று கொரோனா உறுதி

சென்னையில் ஏற்கனவே, 20க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு

சென்னையில் 569 பேருக்கு ஒரே நாளில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால் பாதிப்பு 9,364 கடந்துள்ளது.  தமிழகத்தில் ஒரே நாளில் 4 பேர் கொரோனா பாதிப்புக்கு பலியான நிலையில், பலி எண்ணிக்கை 98 ஆக உயர்வடைந்து உள்ளது என அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மாவட்ட வாரியான விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு;
தமிழகத்தில் மேலும் 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 13,967- ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,12,359-லிருந்து 1,18,447-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,435-லிருந்து 3,583-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 45,300-லிருந்து 48,534-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் புதிதாக 786 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கூறியதாவது;

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 7,128 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 846 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 98-ஆக உயர்ந்துள்ளது.

* தமிழகத்தில் 16 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

*  சென்னையில் இன்று ஒரே நாளில் 569 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 9,364 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 67 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 7,524 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் இதுவரை 3,85,185 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

*  பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 91 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 0.66% ஆக உள்ளது.

* மகாராஷ்டிராவில் இருந்து திரும்புவோருக்கு சோதனை சாவடிகளிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

* தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்களில் தலா 100-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்பு

* அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 48.31% ஆக உள்ளது.

* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 12,653 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 786 பேருக்கு தொற்று உறுதியானது.

* இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 9,447 ஆண்கள், 5,301 பெண்கள், 5 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

* வெளிமாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் இருந்து வந்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள்;

     ^ மகாராஷ்டிரா - 83

     ^ டெல்லி - 13

     ^ மேற்கு வங்கம் - 6

     ^ ஆந்திரா - 2

     ^ குஜராத் - 1

     ^ மத்தியபிரதேசம் - 1

     ^ ஒடிஷா - 1

     ^ தெலுங்கானா - 1

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்

      ^  பிலிப்பைன்ஸ் - 1
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 846 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று ஒரே நாளில் 846 பேர் மீண்ட நிலையில் இதுவரை 7,128 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 98-ஆக உயர்ந்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad