Type Here to Get Search Results !

பல்லாவரத்தில் கவுன்சிலர் உள்பட 7 பேருக்கு கொரோனா பாதிப்பு; அறிகுறியே இல்லாமல் வந்ததால் பரபரப்பு: குமரியில் வக்கீல் உள்பட 3 பேருக்கு கொரோனா பாதிப்பு 28 ஆக உயர்வு

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 

பல்லாவரத்தில் கவுன்சிலர் உள்பட 7 பேருக்கு கொரோனா பாதிப்பு
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று வந்த மேற்கு தாம்பரம், கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்த 51 வயது முதியவருக்கு கடந்த 8-ந் தேதி கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதையடுத்து அவருடைய மனைவி, மகன்கள் உட்பட வீட்டில் இருந்த 6 பேர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் அனைவருக்கும் நேற்று வைரஸ் தொற்று உறுதியானது.

அதேபோல சேலையூர், ஈஸ்வரி நகர் விரிவு பகுதியை சேர்ந்த 38 வயது ஆண், கிழக்கு தாம்பரம் வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த 26 வயது பெண், மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம், பகுதியைச் சேர்ந்த 35 வயது ஆண் ஆகியோருக்கும் கொரோனா வைரஸ் உறுதியானது.

ஆலந்தூர்

ஆலந்தூர் மண்டலத்திற்குட்பட்ட ஆலந்தூர், ஆதம்பாக்கம், பழவந்தாங்கல், மீனம்பாக்கம் போன்ற பகுதிகளில் இருந்து 14 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட மடிப்பாக்கத்தில் பொதுப்பணி துறை ஊழியர் குடும்பத்தில் 5 பேருக்கும், பிற பகுதிகளில் 9 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.

அடையாறு மண்டலத்திற்குட்பட்ட கிண்டி மடுவின்கரை பகுதியில் காய்கறி கடை நடத்திய வியாபாரி அவரது குடும்பத்தினர் 5 பேர் என கொரோனா தொற்று ஏற்பட்டது. கொரோனா தொற்று ஏற்பட்ட அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

பல்லாவரம்

பல்லாவரம் நகராட்சியில் நேற்று 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில் 6 பேர் காய்கறி வியாபாரிகள் ஆவர். இவர்கள், பல்லாவரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு இருந்தனர். அவர்களுக்கு நடத்திய பரிசோதனையில் இவர்களுடன் சேர்த்து இதுவரை 8 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

பல்லாவரம் கண்டோன்மெண்ட் பகுதியில் கவுன்சிலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

கூடுவாஞ்சேரி பகுதியில் காய்கறி வியாபாரிகள் 23 பேருக்கு கொரோனா உறுதி
சென்னையை அடுத்த ஆலந்தூர் மண்டலத்திற்குட்பட்ட ஆலந்தூர், ஆதம்பாக்கம், பழவந்தாங்கல், மீனம்பாக்கம் போன்ற பகுதிகளில் இருந்து 14 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட மடிப்பாக்கத்தில் பொதுப்பணி துறை ஊழியர் குடும்பத்தில் 5 பேருக்கும், பிற பகுதிகளில் 9 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.

அடையாறு மண்டலத்திற்குட்பட்ட கிண்டி மடுவின்கரை பகுதியில் காய்கறி கடை நடத்திய வியாபாரி அவரது குடும்பத்தினர் 5 பேர் என கொரோனா தொற்று ஏற்பட்டது. கொரோனா தொற்று ஏற்பட்ட அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

பல்லாவரம்

பல்லாவரம் நகராட்சியில் நேற்று 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில் 6 பேர் காய்கறி வியாபாரிகள் ஆவர். இவர்கள், பல்லாவரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு இருந்தனர். அவர்களுக்கு நடத்திய பரிசோதனையில் இவர்களுடன் சேர்த்து இதுவரை 8 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

பல்லாவரம் கண்டோன்மெண்ட் பகுதியில் கவுன்சிலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

கூடுவாஞ்சேரி

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 2 பெண்கள் உள்பட காய்கறி வியாபாரிகள் 23 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இவர்கள் அனைவரும் தினமும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று காய்கறி வாங்கி வந்து அந்தந்த பகுதியில் விற்பனை செய்து வந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவு நேற்று வெளியானதில் இவர்கள் 23 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், நந்திவரம், கூடுவாஞ்சேரி, பேரமனூர், ஆலப்பாக்கம், ஊரப்பாக்கம், மண்ணிவாக்கம், ஊனமாஞ்சேரி, காட்டாங்கொளத்தூர் உள்ளிட்ட இவர்கள் வசித்து வந்த அனைத்து பகுதிகளில் உள்ள சாலைகளை மூடும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அச்சரப்பாக்கம்

அச்சரப்பாக்கம் ஒன்றியத்தில் நேற்று வெளியம்பாக்கம், மொரப்பாக்கம் கிராமங்களில் தலா ஒருவருக்கும், கூடலூர் கிராமத்தில் மேலும் 3 பேருக்கும் என 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் நேற்று கொளத்தூர் கிராமத்தில் 2 பேருக்கும், மணப்பாக்கம், காவனூர் கிராமங்களில் தலா ஒருவருக்கும் என 4 பேருக்கு கொரோனா உறுதியானது. 9 பேரும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களுடன் சேர்த்து செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 90 பேர் கொரேனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 356 ஆனது. இவர்களில் 65 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 4 பேர் உயிரிழந்து உள்ளனர். மற்றவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டத்தில் பெண் போலீஸ் உள்பட 2 பேருக்கு கொரோனா பாதிப்பு 6 ஆக உயர்வு
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 23 வயது பெண் சென்னையில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். அதற்கு முன்பு அவருக்கு கொரோனா பரிசோதனைக்கான மாதிரிகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவருக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதியானது. இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி சுகாதாரத்துறையினர் அவரை தனிமைப்படுத்தி தர்மபுரி அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

6 ஆக உயர்வு

இதேபோல் தர்மபுரி மாவட்டம் துரிஞ்சிப்பட்டி பகுதியை சேர்ந்த 29 வயது நபர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு சென்னையிலேயே கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. அவர் சென்னையிலேயே சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த லாரி டிரைவர் மற்றும் கோயம்பேடு சென்று திரும்பிய 3 காய்கறி வியாபாரிகள் என 4 பேர் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில் தற்போது மேலும் 2 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்து உள்ளது.

குமரியில் கொரோனாவுக்கு முதல் பலி ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் முதியவர் சாவு
குமரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதியவர் பலியானார். இதன் மூலம் குமரியில் கொரோனாவுக்கு முதல் பலியானது.

24 பேர் பாதிப்பு

குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆக இருந்து வருகிறது. அவர்களில் 16 பேர் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பி விட்டனர். பெண் லேப் டெக்னீசியன் ஒருவர் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து வந்த 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களில் ஒரு பெண் குழந்தை உள்பட 7 பேர் குமரி மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார் டிரைவர்.

ஆம்புலன்சில் வந்தவர்

இவர்களில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண் குழந்தை மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார் டிரைவரைத் தவிர மற்ற 6 பேரும் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கார் டிரைவர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருப்பதாலும், அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதாலும் அவரை கடலூர் மாவட்ட கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் சேர்த்துள்ளனர். மற்ற 7 பேரையும் குமரி மாவட்ட பட்டியலுக்கு கொண்டு வந்தனர். இதனால் குமரி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உள்ளது.

இதற்கிடையே குமரி மாவட்டம் மயிலாடியைச் சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அதற்காக அவர் சென்னையில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் அவர் சிகிச்சைக்காக சென்னை சென்றிருந்தார். அப்போது அவருடைய உடல்நிலை மிகவும் மோசமானது. இதனால் அவரை சென்னையில் இருந்து ஊருக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர்.

பிணவறையில் உடல்

கடந்த 9-ந் தேதி இரவு அந்த ஆம்புலன்ஸ், குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடி வந்ததும் அங்கிருந்த போலீசாரும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் தடுத்து நிறுத்தினர். கவலைக்கிடமான நிலையில் இருந்த அந்த முதியவருக்கு கொரோனா பரிசோதனை செய்த பிறகு தான் வீட்டுக்கு அனுப்ப முடியும் என்று உடன் வந்த மகளிடம் தெரிவித்தனர்.

பின்னர் அவரை ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும், கொரோனா பரிசோதனைக்கான சளி மற்றும் ரத்த மாதிரிகளை சேகரித்து அனுப்பி வைத்தனர். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 1 மணி நேரத்திலேயே அவர் இறந்து விட்டார். ஆனாலும் பரிசோதனை முடிவு வராததால் அவருடைய உடலை உறவினர்களிடம் கொடுக்காமல், ஆஸ்பத்திரி பிணவறையில் பாதுகாப்பாக வைத்திருந்தனர்.

கொரோனாவுக்கு சாவு

இந்த நிலையில் நேற்று காலை அந்த முதியவரின் கொரோனா பரிசோதனை முடிவு வந்தது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. இதனால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவருடைய உறவினர்களுக்கு இதுபற்றிய விவரம் தெரிவிக்கப்பட்டது. மேலும் உடலை நாகர்கோவில் மாநகராட்சி எரிவாயு தகன மேடையில் தகனம் செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகள் முதியவரின் உறவினர்களிடம் அறிவுறுத்தினர். அதற்கு அவர்களும் சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து அதிகாரிகள் முதியவரின் உடலை பாதுகாப்பான முறையில் கருப்பு பையில் பொதிந்து கொடுத்தனர். பின்னர் அந்த உடல் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு நேற்று மதியம் புளியடியில் உள்ள மாநகராட்சி எரிவாயு தகன மையத்துக்கு கொண்டு சென்று எரியூட்டப்பட்டது. அப்போது அங்குள்ள ஊழியர்கள் பாதுகாப்பு கவச உடை அணிந்து உடலை ஆம்புலன்சில் இருந்து இறக்கி எரிவாயு தகனமேடையில் வைத்து எரித்தனர்.

உடலை ஆம்புலன்சில் இருந்து இறக்குவதற்கு முன்பும், எரித்த பின்னரும் தகனம் செய்த ஊழியர்கள் மீது கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. அதேபோல ஆம்புலன்ஸ் மற்றும் உடல் எடுத்து வரப்பட்ட ஸ்டிரெச்சர் ஆகியவற்றிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

முதல் பலி

மேலும் முதியவருடன் சென்னையில் இருந்து ஆம்புலன்சில் வந்த அவருடைய மகளுக்கும் கொரோனா பரிசோதனைக்கு சளி மாதிரி சேகரிக்கப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்? யார்? என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

குமரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதன் முறையாக இந்த முதியவர் பலியாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் குமரி மாவட்ட மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

அறிகுறியே இல்லாமல் வந்ததால் பரபரப்பு: குமரியில் வக்கீல் உள்பட 3 பேருக்கு கொரோனா பாதிப்பு 28 ஆக உயர்வு
குமரி மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், 2 பேருக்கு கொரோனா அறிகுறியே இல்லாமல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், பாதிப்பு எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

முதல் பலி

குமரி மாவட்டத்தில் 24 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அவர்களில் 6 பேர் மட்டும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒரு பெண்ணுக்கு சென்னையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில் சென்னைக்கு புற்றுநோய் சிகிச்சைக்காக சென்ற முதியவர், மீண்டும் குமரிக்கு வந்த போது கொரோனாவுக்கு பலியானார். குமரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு இவர் தான் முதல் பலி. இதற்கிடையே மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் குமரியில் பாதிப்பு 28 ஆக உயர்ந்துள்ளது.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

வக்கீலுக்கு தொற்று

மயிலாடி பகுதியைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க வக்கீல் ஒருவர் கடந்த 50 நாட்களுக்கு முன்பு சென்னை சென்று ஊர் திரும்பியுள்ளார். அவர் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்குமோ? என்ற சந்தேகத்தில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள சென்றார். அவரிடம் சளி மாதிரி எடுத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த வக்கீலை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இவருக்கும் சென்னையில் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

கோர்ட்டு ஊழியர்

இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் கோர்ட்டு ஊழியராக பணியாற்றும் ஒரு பெண் கடந்த சில நாட்களுக்கு முன் அவரது சொந்த ஊரான ஆசாரிபள்ளத்தை அடுத்த பாம்பன்விளை பகுதிக்கு வந்துள்ளார். அவர் மீண்டும் வேலைக்கு செல்ல முடிவு செய்து தஞ்சையில் உள்ள கோர்ட்டு உயர் அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். அப்போது அதிகாரிகள், நீங்கள் வேலைக்கு வரவேண்டும் என்றால் கொரோனா தொற்று பரிசோதனை செய்து, தொற்று இல்லை என்ற பரிசோதனை அறிக்கையுடன் வரவேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதையடுத்து அவரும் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். இதில் அவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. இதனால் அவரும் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். தொற்று உருவான வக்கீலுக்கும், கோர்ட்டு ஊழியருக்கும் அறிகுறியே இல்லாமல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரு பெண்

இதேபோல் பெங்களூருவில் இருந்து குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு பெண் வந்தார். அவருக்கு ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் சளி மாதிரி சேகரித்து பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து அவருக்கு 2-வது பரிசோதனை மேற்கொள்ள அவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்து தனிமைப்படுத்தி உள்ளனர். அவருக்கு மீண்டும் சளி மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. 2-வது பரிசோதனையிலும் அவருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்தால், புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயரும். இந்த எண்ணிக்கை விவரம் இன்றைய (செவ்வாய்க்கிழமை) பட்டியலில் தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மராட்டியத்தில் இருந்து கரூர் வந்த 9 பேருக்கு கொரோனா தொற்று இல்லை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்
மராட்டியத்தில் இருந்து கரூர் வந்த 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது பரிசோதனை முடிவில் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.

மராட்டியத்தில் இருந்து வந்தனர்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், தமிழகத்தில் இருந்து மராட்டிய மாநிலத்திற்கு படிப்பு, வேலை தொடர்பாக சென்றவர்கள் மீண்டும் தமிழகத்திற்கு திரும்ப முடியாத நிலை இருந்தது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கையால், அவர்கள் ரெயில் மூலம் நேற்று முன்தினம் திருச்சி வந்தனர். பின்னர் அவர்கள் பஸ்கள் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இதில் கரூர் மாவட்ட பகுதியை சேர்ந்த 2 ஆண்கள், 7 பெண்கள் உள்ளிட்ட 9 பேர் நேற்று முன்தினம் பஸ் மூலம் கரூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் ஆண்கள் ஆன்லைன் வேலை தொடர்பாகவும், பெண்கள் படிப்பு தொடர்பாக மராட்டியத்திற்கு சென்றவர்கள் ஆவார்கள்.

பரிசோதனை

கரூர் வந்த அவர்கள் 9 பேரும் மாவட்ட கலெக்டரின் அறிவுரையின்பேரில் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியானது. இதில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து குளித்தலை சப்-கலெக்டர் ஷேக்அப்துல்ரகுமான், தலைமை மருத்துவர் ஸ்ரீகாந்த் மற்றும் மருத்துவர்கள் ஆகியோர் அறிவுரைகள் வழங்கி, அவர்கள் 9 பேரும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தினர். அவர்களுக்கு நோய் தடுப்பு முறைகள் குறித்தும் எடுத்து கூறினர். மேலும் அவர்களுக்கு போதிய மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.

வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்

மேலும் அவர்களுடைய பெற்றோர் நேற்று குளித்தலை அரசு மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டு, அவர்களுடன் அந்த 9 பேரும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப் பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை பொது சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறையினர் மேற்கொண்டனர். இந்த 9 பேரில் ஒரு பெண் கரூர் தான்தோன்றிமலை பகுதியை சேர்ந்தவர். 4 பேர் தோகைமலையை சுற்றியுள்ள பகுதியையும், 4 பேர் இனுங்கூரை சுற்றியுள்ள பகுதியையும் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

சூளகிரியில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 10 பேர் மருத்துவமனைக்கு செல்ல மறுப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காமராஜ் நகர் பகுதியில் கடந்த மே மாதம் 4-ந் தேதி 2 பெண்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதன் பிறகு 6-ந் தேதி ஓசூரில் 2 இளைஞர்களுக்கு கொரோனா இருப்பது தெரிய வந்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த 7-ந் தேதி சூளகிரியில் மேலும் 4 பேருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்தது. 8-ந் தேதி சூளகிரியில் ஒரு இளைஞருக்கும், ஒரு பெண்ணுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இவர்கள் 10 பேரும், ஓசூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் சூளகிரி காமராஜ் நகரை சேர்ந்த கணவன், மனைவி, மகன், மகள் ஆகிய 4 பேர் உள்பட மேலும் 10 பேருக்கு கடந்த 9-ந்தேதி கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது.

பேச்சுவார்த்தை

இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 10 பேரும், அவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். மேலும் அவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வர மறுப்பு தெரிவித்தனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் சிகிச்சைக்கு வராமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்ததும் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினரும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளருமான முருகன், மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் ஷேக் ரஷீத் மற்றும் அதிகாரிகள் காமராஜர் நகர் பகுதிக்கு சென்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது 10 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அனைவரும் வீடு திரும்பலாம். உங்கள் யாருக்கும் கொரோனாவால் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை. எனவே உடனடியாக வீடு திரும்ப முடியும். ஆகவே அனைவரும் டாக்டர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் ஒத்துழைப்பு தந்து சிகிச்சைக்கு செல்லவும் என்று கூறினர்.

மருத்துவமனையில் அனுமதி

நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு 10 பேரும் சிகிச்சைக்கு ஓசூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு செல்ல சம்மதம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் வாகனங்கள் அங்கு கொண்டு வரப்பட்டன. தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளான 10 பேரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் அனுமதிக்கப்பட்டு மருத்துவக்குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ராஜபாளையம் முதியவருக்கும் தொற்று மும்பையில் இருந்து மதுரை வந்த பெண் உள்பட 4 பேருக்கு கொரோனா
மதுரையில் நேற்று முன்தினம் வரை கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 118-ஆக இருந்தது. இந்த நிலையில் நேற்று மேலும் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் ஒருவர் மதுரை சமயநல்லூர் அருகே உள்ள தோடனேரி கிராமத்தை சேர்ந்த 23 வயது வாலிபர். இவர் விமான நிலையத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இவரது உறவினர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்த வாலிபருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மற்றொருவர் மதுரை மேலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பெண். அதாவது, மும்பையில் இருந்து 16 பேர் கொண்ட குழுவினர் மதுரை மேலூருக்கு வந்தனர். அவர்களை அங்குள்ள மருத்துவ முகாமில் சுகாதார அதிகாரிகள் தங்க வைத்திருந்தனர். இந்த நிலையில் அங்கு தங்கியிருந்த அந்த 35 வயது பெண்ணுக்கு நேற்று கொரோனா உறுதிசெய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டு அங்குள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

மற்ற 2 பேரும் மதுரை கோரிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவர் நேற்று முன்தினம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணியின் தாயார் ஆவார். இவருடைய வயது 43.

இதுபோல் மற்றொருவர், அதே பகுதியை சேர்ந்த 54 வயது நபர். இவருக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தன. இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இவர்கள் 2 பேரும் தற்போது மதுரை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இதுபோல் இவர்களுடன் தொடர்பில் இருந்த சிலரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து அவர்கள் தங்கியிருந்த பகுதிகளில் உள்ள தெருக்கள் சீல் வைத்து அடைக்கப்பட்டன.

மேலும் சுகாதார துறையின் மூலம் அவர்கள் தங்கியிருந்த குடியிருப்பை சுற்றி கிருமிநாசினி தெளிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதன்மூலம் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 122-ஆக உயர்ந்தது.

மதுரையில் சில தினங்களுக்கு முன்பு ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த 30 வயது கர்ப்பிணியும் ஒருவர். அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது அந்த குழந்தையும், அந்த பெண்ணும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். இருப்பினும் அந்த குழந்தைக்கு, தாயிடம் இருந்து கொரோனா பரவுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால், குழந்தைக்கும் கொரோனா தொடர்பான பரிசோதனை செய்யப்பட இருக்கிறது. அந்த பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே குழந்தைக்கு பாதிப்பு இருக்கிறதா-இல்லையா? என்பதை உறுதியாக கூறமுடியும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

விருதுநகர் மாவட்டத்தில் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. அவர்களில் 6 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் குணம் அடைந்தனர். விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் பெரும்பாலானோர் வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள். இந்த நிலையில் நேற்று ராஜபாளையம் அழகாபுரி பகுதியை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் இருதய நோய் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதை தொடர்ந்து அழகாபுரி பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் விருதுநகர் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 40-ஆக உயர்ந்துள்ளது.

மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்த சேலம் தொழிலாளர்கள் 76 பேருக்கு கொரோனா பரிசோதனை
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். தமிழகத்தில் உள்ள பிற மாநில தொழிலாளர்களை அவர்களின் விருப்பங்களின் அடிப்படையில் அரசின் அனுமதியுடன் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதற்கும், பிற மாநிலங்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களை அந்தந்த மாநில அரசுகளின் அனுமதியோடு தமிழகத்திற்கு அழைத்து வருவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி மராட்டியம் மாநிலத்தில் பணிபுரிந்து வந்த தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 479 தொழிலாளர்கள் அங்கிருந்து 16 பஸ்கள் மூலம் நேற்று முன்தினம் இரவு சேலம் கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்திற்கு வந்தடைந்தனர். அவர்கள் அனைவரையும் வரவேற்று அவர்களுக்கு தேவையான உணவு வழங்கப்பட்டது. இந்த பணியை மாவட்ட கலெக்டர் ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

கொரோனா பரிசோதனை

தொடர்ந்து அவரவர்களின் சொந்த மாவட்டங்களுக்கு சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் 12 பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களது விவரங்கள் அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 27 தொழிலாளர்கள் சேலம் கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைபடுத்துவதற்கான மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று இருக்கிறதா? என்பதை கண்டறிவதற்கான பரிசோதனை செய்யப்படுகிறது. பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்த பிறகு அவர்கள், வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று கலெக்டர் ராமன் தெரிவித்தார். மேலும் சேலம் மாவட்டத்தில் பணிபுரிந்த மராட்டிய மாநிலத்தை சேர்ந்த 173 தொழிலாளர்களை அந்த மாநிலத்தில் இருந்து வந்த 16 பஸ்களின் மூலம் உரிய அனுமதியுடன் அவர்களின் சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

திருச்சி வழியாக வந்தவர்கள்

இதே போல மராட்டிய மாநிலம் சோளாப்பூரிலிருந்து ரெயில் மூலம் நேற்று காலை திருச்சிக்கு வந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த 49 தொழிலாளர்கள் பஸ்கள் மூலம் சேலம் அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவர்கள் கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைபடுத்துவதற்கான மையத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது.

தொழிலாளர்களை வரவேற்கும் நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், மேட்டூர் சப்-கலெக்டர் சரவணன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் நிர்மல்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தஞ்சை மாவட்டத்தில்ஆசிரியை உள்பட 3 பேருக்கு கொரோனா
தஞ்சை மாவட்டத்தில் ஆசிரியை உள்பட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கொரோனா பாதிப்பு

தஞ்சை மாவட்டத்தில் ஏற்கனவே 66 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவர்கள் வசித்த பகுதிகள் சீல் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்த 46 பேர் வீடு திரும்பினர். 20 பேர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் 3 பேருக்கு உறுதி

இந்த நிலையில் மேலும் 3 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கும்பகோணத்தை சேர்ந்த 23 வயதான பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர் சென்னையில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். தற்போது இவர் சென்னையில் இருந்து கும்பகோணம் வந்துள்ளார். அரியலூர் மாவட்டம் கழுமங்கலத்தை சேர்ந்த 35 வயதான ஆணுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவரும் சென்னை கோயம்பேட்டில் இருந்து வந்தவர் ஆவார்.தாராசுரம் மார்க்கெட்டுக்கு வந்த டிரைவரான கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 32 வயதானவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர் கடலூரில் இருந்து உத்தரபிரதேசம் மாநிலம் சென்று அங்கிருந்து கோயம்பேடு வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து மேட்டுப்பாளையம் சென்று விட்டு தாராசுரம் வந்தது தெரிய வந்தது.

69 ஆக உயர்வு

இதனையடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது. இதில் 23 பேர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

திருச்சி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் வீடு திரும்பினர்
திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்து உள்ளது.

4 பேர் டிஸ்சார்ஜ்

திருச்சி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 64, அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 16, பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 36, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 3, ஈரோடு, கரூர் மாவட்டங்களை சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 121 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.

இவர்களில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் நேற்று பூரண குணம் அடைந்து அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். திருச்சி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 55 பேர், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 11 பேர், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 7 பேர், ஈரோடு, கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 76 பேர் இதுவரை ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு உள்ளனர்.

45 பேருக்கு சிகிச்சை

தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 9பேர், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 29 பேர், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 5பேர், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 45 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்தநிலையில் ‘பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியில் நடமாடுவதை தவிர்க்கவேண்டும். வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் சுகாதாரத்துறை பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வராமல் 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும், மேலும் திருச்சியை விரைவில் கொரோனா வைரஸ் தொற்று இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்’ என திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னையில் இருந்து வந்தவர்கள்: தூத்துக்குடியில் புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரசால் ஏற்கனவே 27 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் 26 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஒரு மூதாட்டி பரிதாபமாக இறந்தார். அதன் பிறகு 18 நாட்களாக புதிய தொற்று ஏற்படாமல் இருந்தது. அதன்பிறகு கடந்த 6-ந் தேதி சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த 2 பேருக்கும், 7-ந் தேதி மேலும் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்தது. தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.

மேலும் வெளிமாவட்டங்களில் இருந்து தூத்துக்குடிக்கு வருபவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மாவட்ட எல்லையில் பரிசோதனை நடத்தப்பட்டு, அறிகுறி உள்ளவர்கள் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, அனுமதிக்கப்பட்டவர்களின் சளி மாதிரிகள் சேகரித்து பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் கோவில்பட்டி, எட்டயபுரம், ஆழ்வார்திருநகரி ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் 3 பேரும் சென்னையில் இருந்து வந்தவர்கள் ஆவர். இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்து உள்ளது.

தற்போது பாதிக்கப்பட்டவர்களில் எட்டயபுரம் பகுதியில் உள்ள இளம்புவனத்தைச் சேர்ந்த 23 வயதான வாலிபர் சென்னையில் உள்ள மளிகை கடையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சென்னையில் இருந்து மோட்டார் சைக்கிளில் இளம்புவனத்துக்கு வந்தார். அவருக்கு சுகாதார துறையினர் நடத்திய பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவரது குடும்பத்தினர் 6 பேரையும் வீட்டிலேயே தனிமைப்படுத்தி உள்ளனர். தொடர்ந்து இளம்புவனம் பகுதியில் சுகாதார துறையினர் கிருமிநாசினி தெளித்தனர். அங்கு வெளியூர்களில் இருந்து யாரும் நுழையாத வகையில், போலீசார் தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

10 பேர் குணமடைந்தனர்

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கொரோனா நோயாளிகள், நெல்லை அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இங்கு நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 90 பேர் சிகிச்சை பெற்றனர். அதில் ஒரு முதியவர் பலியானார்கள். 62 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்கள். மீதமுள்ள 27 பேரும் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். நெல்லை மாவட்டத்தில் நேற்று புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.

தென்காசி மாவட்டத்தை பொறுத்த வரை கடந்த 2 நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு இல்லாமல் உள்ளது. அங்கு 52 பேர் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 26 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். இந்த நிலையில் நேற்று நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற புளியங்குடியை சேர்ந்த 4 பெண்கள் உள்பட 10 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அவர்கள் அனைவரும் 14 நாட்கள் தங்களது வீடுகளில் தனிமையில் இருக்க ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது. இதையடுத்து தென்காசி மாவட்டத்தில் 16 பேர் மட்டுமே நெல்லை, தென்காசி அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்கள் அனைவரும் ஆரோக்கியமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் அடுத்தடுத்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad