Type Here to Get Search Results !

தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டும் மேலும் 688 பேருக்கு கொரோனா; தமிழக மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டோர் விவரம் வெளியீடு

தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டும் 688 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. சீனாவின் வூகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. இதனிடையே உலகளவில் உயிரிழப்பானது இரண்டு லட்சத்தை தாண்டியுள்ளது.
* தமிழ்நாட்டில் இன்று 688 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

* தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு 12,448 எண்ணிக்கை ஆக உயர்வு

* தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,000ஐ தாண்டியது

* சென்னையில் மட்டும் இன்று 552 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

* சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7672ஆக அதிகரிப்பு

* தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 489 பேர் டிஸ்சார்ஜ்

* கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4895ஆக உயர்வு

* தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3 பேர் இன்று உயிரிழப்பு

* தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 84ஆக உயர்வு

* துபாய், குவைத், மலேசியாவிலிருந்து வந்த 36 பேருக்கு இன்று கொரோனா உறுதி

* மகாராஷ்டிராவிலிருந்து சொந்த ஊர் திரும்பிய 49 பேருக்கு இன்று கொரோனா உறுதி

* கேரள மாநிலத்திலிருந்து சொந்த ஊர் திரும்பிய ஒருவருக்கும் கொரோனா உறுதி

* சென்னையைச் சேர்ந்த 82 வயது முதியவர் கொரோனாவுக்கு உயிரிழப்பு

* சென்னை தனியார் மருத்துவனையில் 72 வயது முதியவர் கொரோனாவுக்கு பலி

* திருவள்ளூரைச் சேர்ந்த 64 வயதான முதியவர் சென்னையில் உயிரிழப்பு
சென்னையில் 552 பேருக்கு ஒரே நாளில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால் பாதிப்பு 7 ஆயிரம் என்ற எண்ணிக்கையை கடந்துள்ளது.  தமிழகத்தில் ஒரே நாளில் 3 பேர் கொரோனா பாதிப்புக்கு பலியான நிலையில், பலி எண்ணிக்கை 84 ஆக உயர்வடைந்து உள்ளது என அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மாவட்ட வாரியான விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு;

தமிழகத்தில் மேலும் 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 12,488- ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 96,169-லிருந்து 1,01,139-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,029-லிருந்து 3,163-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 36,824-லிருந்து 39,174-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் புதிதாக 688 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 4,895 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 489 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 84-ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 63 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 7,466 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் இன்று மொத்தம் 14 மாவட்டங்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
     
* தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் தலா 100-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்பு

* தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் விகிதம் 60.49% ஆக உள்ளது.

* தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 39.32% ஆக உள்ளது.

* தமிழகத்தில் இதுவரை 3,48,174 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 10,333 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 688 பேருக்கு தொற்று உறுதியானது.

* தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்பியவர்களுக்கு இதுவரை மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

* இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 8,054 ஆண்கள், 4,391 பெண்கள், 3 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் ஆரஞ்சு மண்டலங்களின் எண்ணிக்கை குறைந்து சிவப்பு மண்டலங்களாக மாறி வருகிறது.

* தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 0.67% ஆக உள்ளது

* அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

* கொரோனா முன்னெச்சரிக்கையில் பாதுகாப்பு வளையத்திற்குள் தான் தமிழகம் உள்ளது.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 552 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 7,114 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இதுவரை 58 பேர் உயிரிழந்துள்ளனர்.

* வெளிமாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் இருந்து வந்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள்;

     ^ மகாராஷ்டிரா - 49
     ^ கேரளா - 01
     ^ துபாய் - 23
     ^ மாலத்தீவு - 01
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 489 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று ஒரே நாளில் 489 பேர் மீண்ட நிலையில் இதுவரை 4,895 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 84-ஆக உயர்ந்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad