Type Here to Get Search Results !

இந்தியாவில் கொரோனாவால் 67,152 பேர் பாதிப்பு

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 

இந்தியாவில் கொரோனாவால் 67,152 பேர் பாதிப்பு;
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67,000-ஐ தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா   வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர்   எண்ணிக்கை 67,152 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 4213 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 97 பேர்  உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 2,206 பேர் உயிரிழந்த நிலையில், 20, 917  பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  அதனை தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமுடன் ஈடுபட்டு வருகின்றன.  எனினும், பொதுமக்கள் அளிக்கும் ஒத்துழைப்புக்கு ஏற்ப கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் என்று அரசு தெரிவித்து வருகிறது.

நாட்டில் கொரோனா பாதிப்புக்கு, பலி எண்ணிக்கை 2,109 ஆக நேற்று உயர்வடைந்தது.  19 ஆயிரத்து 358 பேர் குணமடைந்தும், 41 ஆயிரத்து 472 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.  இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 62 ஆயிரத்து 939 ஆக உயர்வடைந்து இருந்தது.

இந்த நிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 97 பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 2,109ல் இருந்து 2,206 ஆக உயர்வடைந்து உள்ளது.  20 ஆயிரத்து 917 பேர் குணமடைந்தும், 44 ஆயிரத்து 29 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 62 ஆயிரத்து 939ல் இருந்து 67 ஆயிரத்து 152 ஆக உயர்வடைந்து உள்ளது.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 22,171 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 832 பேர்   உயிரிழந்துள்ள நிலையில், 4,199 பேர் குணமடைந்துள்ளனர். அடுத்த இடத்தில் 8194 பேருக்கு தொற்று பாதிப்புடன் குஜராத் மாநிலம் 2ம்   இடத்தில் உள்ளது. அங்கு, 493 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2545 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் 2 வாரங்களாக  4-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 7204 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ள  நிலையில், 1959 பேர் குணமடைந்துள்ளனர்.

மாநில வாரியாக விவரம்:

அசாமில் 63 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 34 பேர் குணமடைந்தது.
பீகாரில் 696 பேருக்கு பாதிப்பு; 6 பேர் பலி; 365 பேர் குணமடைந்தது.
சண்டிகரில் 169 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 24 பேர் குணமடைந்தது.
சத்தீஸ்கரில் 59 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 49 பேர் குணமடைந்தது.

கோவாவில் 7 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 7 பேர் குணமடைந்தது.
டெல்லியில் 6923 பேருக்கு பாதிப்பு; 73 பேர் பலி; 2069 பேர் குணமடைந்தது.
அரியானாவில் 703 பேருக்கு பாதிப்பு; 10 பேர் பலி; 300 பேர் குணமடைந்தது.
திரிபுராவில் 150 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 2 பேர் குணமடைந்தது.

கேரளாவில் 512 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 489 பேர் குணமடைந்தது.
ராஜஸ்தானில் 3814 பேருக்கு பாதிப்பு; 107 பேர் பலி; 2176 பேர் குணமடைந்தது.
ஜார்கண்டில் 157 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 78 பேர் குணமடைந்தது.
லடாக்கில் 42 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 21 பேர் குணமடைந்தது.

மணிப்பூரில் 2 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 2 பேர் குணமடைந்தது.
மேகலாயாவில் 13 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 10 பேர் குணமடைந்தது.
மிஸ்ரோமில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.
ஒடிசாவில் 377 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 68 பேர் குணமடைந்தது.

பாணடிச்சேரி 9 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 6 பேர் குணமடைந்தது.
நாகாலாந்தில் 0 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.
பாஞ்சாப்பில் 1823 பேருக்கு பாதிப்பு; 31 பேர் பலி; 166 பேர் குணமடைந்தது.
உத்தரகாண்ட்டில் 68 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 46 பேர் குணமடைந்தது.

கர்நாடகாவில் 848 பேருக்கு பாதிப்பு; 31 பேர் பலி; 424 பேர் குணமடைந்தது.
ஜம்மு காஷ்மீரில் 861 பேருக்கு பாதிப்பு; 9 பேர் பலி; 383 பேர் குணமடைந்தது.
தெலுங்கானாவில் 1196 பேருக்கு பாதிப்பு; 30 பேர் பலி; 750 பேர் குணமடைந்தது.
மேற்கு வங்கத்தில் 1939 பேருக்கு பாதிப்பு; 185 பேர் பலி; 417 பேர் குணமடைந்தது.

ஆந்திரப்பிரதேசத்தில் 1980 பேருக்கு பாதிப்பு; 45 பேர் பலி; 925 பேர் குணமடைந்தது.
மத்தியப்பிரதேசத்தில் 3614 பேருக்கு பாதிப்பு; 215 பேர் பலி; 1676 பேர் குணமடைந்தது.
உத்தரப்பிரதேசத்தில் 3467 பேருக்கு பாதிப்பு; 74 பேர் பலி; 1653 பேர் குணமடைந்தது.
அருணாச்சலப்பிரதேசத்தில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.

இமாச்சலப்பிரதேசத்தில் 55 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 39 பேர் குணமடைந்தது.
அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 33 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 33 பேர் குணமடைந்தது.
தாதர் நகர் ஹவேலியில் 1 பேருக்கு பாதிப்பு; யாரும் குணமடையவில்லை; உயிரிழக்கவில்லை.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad