Type Here to Get Search Results !

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56,000-ஐ தாண்டியது;

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56,000-ஐ தாண்டியது
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  அதனை தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமுடன் ஈடுபட்டு வருகின்றன.  எனினும், பொதுமக்கள் அளிக்கும் ஒத்துழைப்புக்கு ஏற்ப கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் என்று அரசு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் கொரோனா பாதிப்புக்கு 103 பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 1,783ல் இருந்து 1,886 ஆக உயர்வடைந்து உள்ளது.  16 ஆயிரத்து 539 பேர் குணமடைந்தும், 37,916 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 52 ஆயிரத்து 952ல் இருந்து 56 ஆயிரத்து 342 ஆக உயர்வடைந்து உள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56,000-ஐ தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால்  இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56,342 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3390 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 103 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.   கொரோனாவால் இதுவரை 1886 பேர் உயிரிழந்த நிலையில், 16,540 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 17,974 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 694 பேர்  உயிரிழந்துள்ள நிலையில், 3301 பேர் குணமடைந்துள்ளனர். அடுத்த இடத்தில் 7012 பேருக்கு தொற்று பாதிப்புடன்  குஜராத் மாநிலம் 2ம் இடத்தில் உள்ளது. அங்கு, 425 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1709 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது. கடந்த வாரம் வரை 6-வது இடத்தில் இருந்த தமிழகம் இந்த வாரம்   முதல் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தமிழகத்தில் 5409 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1547 பேர் குணமடைந்துள்ளனர்.

மாநில வாரியாக விவரம்:

அசாமில் 54 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 34 பேர் குணமடைந்தது.
பீகாரில் 550 பேருக்கு பாதிப்பு; 5 பேர் பலி; 246 பேர் குணமடைந்தது.
சண்டிகரில் 135 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 21 பேர் குணமடைந்தது.
சத்தீஸ்கரில் 59 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 38 பேர் குணமடைந்தது.

கோவாவில் 7 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 7 பேர் குணமடைந்தது.
டெல்லியில் 5980 பேருக்கு பாதிப்பு; 66 பேர் பலி; 1931 பேர் குணமடைந்தது.
அரியானாவில் 625 பேருக்கு பாதிப்பு; 7 பேர் பலி; 260 பேர் குணமடைந்தது.
திரிபுராவில் 65 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 2 பேர் குணமடைந்தது.

கேரளாவில் 503 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 474 பேர் குணமடைந்தது.
ராஜஸ்தானில் 3427 பேருக்கு பாதிப்பு; 97 பேர் பலி; 1596 பேர் குணமடைந்தது.
ஜார்கண்டில் 132 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 41 பேர் குணமடைந்தது.
லடாக்கில் 42 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 17 பேர் குணமடைந்தது.

மணிப்பூரில் 2 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 2 பேர் குணமடைந்தது.
மேகலாயாவில் 12 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 10 பேர் குணமடைந்தது.
மிஸ்ரோமில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.
ஒடிசாவில் 219 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 62 பேர் குணமடைந்தது.

பாணடிச்சேரி 9 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 6 பேர் குணமடைந்தது.
நாகாலாந்தில் 0 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.
பாஞ்சாப்பில் 1644 பேருக்கு பாதிப்பு; 28 பேர் பலி; 149 பேர் குணமடைந்தது.
உத்தரகண்ட்டில் 61 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 39 பேர் குணமடைந்தது.

கர்நாடகாவில் 705 பேருக்கு பாதிப்பு; 30 பேர் பலி; 366 பேர் குணமடைந்தது.
ஜம்மு காஷ்மீரில் 793 பேருக்கு பாதிப்பு; 9 பேர் பலி; 335 பேர் குணமடைந்தது.
தெலுங்கானாவில் 1123 பேருக்கு பாதிப்பு; 29 பேர் பலி; 650 பேர் குணமடைந்தது.
மேற்கு வங்கத்தில் 1548 பேருக்கு பாதிப்பு; 151 பேர் பலி; 364 பேர் குணமடைந்தது.

ஆந்திரப்பிரதேசத்தில் 1847 பேருக்கு பாதிப்பு; 38 பேர் பலி; 780 பேர் குணமடைந்தது.
மத்தியப்பிரதேசத்தில் 3252 பேருக்கு பாதிப்பு; 193 பேர் பலி; 1231 பேர் குணமடைந்தது.
உத்தரப்பிரதேசத்தில் 3071 பேருக்கு பாதிப்பு; 62 பேர் பலி; 1250 பேர் குணமடைந்தது.
அருணாச்சலப்பிரதேசத்தில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.

இமாச்சலப்பிரதேசத்தில் 46 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 38 பேர் குணமடைந்தது.
அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 33 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 33 பேர் குணமடைந்தது.
தாதர் நகர் ஹவேலியில் 1 பேருக்கு பாதிப்பு; யாரும் குணமடையவில்லை; உயிரிழக்கவில்லை.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad