தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்!
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 5,409 ஆக அதிகரிப்புதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,409ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 580 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ’தமிழகத்தில் இன்று 14,195 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,409 ஆக அதிகரித்துள்ளது. இன்று 31 பேர் உடல்நலம் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில் வீடுதிரும்பியவர்கள் எண்ணிக்கை 1,547 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் இன்று 316 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. அதன்மூலம் சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2644 ஆக உயர்ந்துள்ளது.
இன்று, கடலூரில் 32 பேருக்கும், அரியலூரில் 24 பேருக்கும், பெரம்பலூரில் 33 பேருக்கும், திருவள்ளூரில் 63 பேருக்கும், விழுப்புரத்தில் 45 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தநிலையில், தற்போது மற்ற மாவட்டங்களிலும் அதிக எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது.
கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் 1 நபருக்கும், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் 2 பேருக்கும், கிருஷ்ணகிரி 4 பேருக்கும், பெரம்பலூர் 33 பேருக்கும், ராணிப்பேட்டை 7 பேருக்கும், தேனி,
நெல்லை 3 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டம் 63 பேருக்கும், திருவண்ணாமலை 17 பேருக்கும், திருச்சியில் 5 பேருக்கும், விழுப்புரம் 45 பேருக்கு என 580 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சை பெற்று வந்த 31 பேர் குணமடைந்து வீட்டுக்கு சென்ற நிலையில் 1,547 ஆக உயர்ந்துள்ளது. இதனால் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3,822 ஆக உள்ளது. மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களில் 2 பெண்கள் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதில் திருவள்ளூரை சேர்ந்த பெண்ணுக்கு தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு நபரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவியது. சிலருக்கு எங்கே இருந்து பரவியது என்று தெரியவில்லை. ஆனால் நேற்று தொற்று பாதிக்கப்பட்ட 580 பேரும் ஒருவருக்கு ஒருவர் தொடர்பில் இருந்தவர்கள். இதில் சென்னையில் 13 குழந்தைகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
கொரோனா பரவல் - சென்னையின் நிலை என்ன?
சென்னையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 62.78 சதவீதம் ஆண்கள், 37.18 சதவீதம் பெண்களும், திருநங்கை ஒருவரும் உள்ளனர்.
நீண்ட நாட்களுக்கு பின் திரு.வி.க.மண்டலத்தில் புதிய தொற்றின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், ராயபுரத்தில் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதேபோல், கோடம்பாக்கம், தேனாம்பேட்டையில் மின்னல் வேகத்தில் தொற்று பரவல் உள்ளது.
தமிழகத்தில் மே 7-ம் தேதி உறுதி செய்யப்பட்ட 580 தொற்றுகளில், சென்னையில் புதிய உச்சமாக 316 பேருக்கு தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இதுவரை மொத்தம் பாதித்துள்ள 2644 பேரில், 358 பேர் குணமடைந்துள்ளனர். 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
மண்டல வாரியாக மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை:
குணமடைந்தவர்கள்
வயது வாரியாக பார்க்கையில்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. அரசும் தடுப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. எனினும், மக்கள் ஒத்துழைப்பு அவசியம் என சுட்டி காட்டியுள்ளது.
இந்த நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர்கள் உள்பட 3 பேர் இன்று பலியாகி உள்ளனர்.
அவர்களில் ஒருவர் சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்த 77 வயது முதியவர் ஆவார். மற்றொருவர் கோயம்பேடு சந்தையை சேர்ந்த 56 வயது காய்கறி வியாபாரி ஆவார்.
இவர்கள் தவிர சூளைமேட்டை சேர்ந்த 80 வயது மூதாட்டி ஒருவரும் கொரோனா பாதிப்புக்கு பலியாகி உள்ளார். அவர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் கடந்த 5ந்தேதி சிகிச்சைக்காக சேர்ந்து உள்ளார். அவருக்கு முன்பே உடல்நல குறைவு ஏற்பட்டிருந்தது.
காய்கறி வியாபாரி உள்பட 2 பேருக்கும் உடல்நல பாதிப்பு இருந்தது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்து உள்ளது.
Post a Comment
0 Comments