Type Here to Get Search Results !

தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) மட்டும் மேலும் 509 பேருக்கு கொரோனா; தமிழக மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டோர் விவரம் வெளியீடு

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 

தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) மட்டும் 509 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. சீனாவின் வூகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. இதனிடையே உலகளவில் உயிரிழப்பானது இரண்டு லட்சத்தை தாண்டியுள்ளது.

தமிழகத்தில் இன்று 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9227 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கியது முதல் சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டது. கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பாதிப்பு ஏற்பட தொடங்கிய முதல் செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டத்திலும் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னையை போல் இந்த மாவட்டங்களும் மாறிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்ட மாவட்டம் பட்டியலில் முதலிடத்தில் சென்னை உள்ளது. அதைத்தொடர்ந்து திருவள்ளூர், கடலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் முறையே அடுத்தடுத்து உள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில், தமிழகத்தில் இன்று மேலும் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,227  ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு நாளில் மட்டும் 380 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  5262-ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட உயிரிழப்பு 61 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மாவட்ட வாரியான விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு;
தமிழகத்தில் மேலும் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 9,227- ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70,756-லிருந்து 74,281-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,293-லிருந்து 2,415-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 22,455-லிருந்து 24,386-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 509 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 2,176 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 42 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 64-ஆக உயர்ந்துள்ளது.

* தமிழகத்தில் இன்று மொத்தம் 16 மாவட்டங்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 56 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 6,984 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் தலா 100-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்பு

* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 12,666 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 509 பேருக்கு தொற்று உறுதியானது.

* சென்னை மிகவும் நெருக்கமான மாநகரம் என்பதால் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது.

* தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்பியவர்களுக்கு இதுவரை மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

* இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 6,136 ஆண்கள், 3,088 பெண்கள், 3 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் ஆரஞ்சு மண்டலங்களின் எண்ணிக்கை குறைந்து சிவப்பு மண்டலங்களாக மாறி வருகிறது.

* அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

* கொரோனா முன்னெச்சரிக்கையில் பாதுகாப்பு வளையத்திற்குள் தான் தமிழகம் உள்ளது.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 380 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 5,262 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று ஒரே நாளில் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

* புதிதாக வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு திரும்பியவர்களில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 42 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று ஒரே நாளில் 42 பேர் மீண்ட நிலையில் இதுவரை 2,176 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 64-ஆக உயர்ந்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad