Type Here to Get Search Results !

தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டும் மேலும் 508 பேருக்கு கொரோனா; தமிழக மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டோர் விவரம் வெளியீடு

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்!
தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டும் 508 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. சீனாவின் வூகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. இதனிடையே உலகளவில் உயிரிழப்பானது இரண்டு லட்சத்தை தாண்டியுள்ளது.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, ‘தமிழகத்தில் இன்று மட்டும் 11,858 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில் இல்லாத அளவுக்கு 508 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்தமாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4058 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 76 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அதன்மூலம், 1485 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்துவீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் உயிரிழந்தநிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. கோயம்பேடு சந்தை மூலம் ஏராளமான பேருக்கு கொரோனா பரவியுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும், தமிழகத்தில் கொரோனா நோய்க்கிருமி பரவுவதை தடுத்து நிறுத்த முடியவில்லை. நோய்த்தொற்று பரவுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக பச்சிளம் குழந்தைகளும், சிறுவர்களும் இந்த நோய் தொற்றுக்கு அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கர்ப்பிணிகளும், முதியவர்களும் தொடர்ந்து பாதிப்புக்கு ஆளாகின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்றால் தமிழகத்தில் சமூக பரவல் தொடங்கிவிட்டதோ என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு  இன்று ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,058 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 279 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2003 ஆக உயர்ந்துள்ளது

*தமிழகத்தில் ஒரே நாளில் மேலும் 508 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

*சென்னையில் மட்டும் இன்று 279 பேருக்கு கொரோனா பாதிப்பு

*தமிழகத்தில் மொத்தம் 4058 பேர் வைரஸ் தொற்றால் பாதிப்பு : சுகாதாரத்துறை

*தமிழகத்தில் நோய் தொற்றில் இருந்து இன்று 76 பேர் குணமடைந்தனர் : சுகாதாரத்துறை

*கொரோனா தொற்றுக்கு மேலும் 2 பேர் பலி - இதுவரை 33 பேர் உயிரிழப்பு

*கடலூரில் இன்று ஒரே நாளில் 68 பேருக்கு கொரோனா பாதிப்பு

*செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தலா 38 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி

*கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதன் முறையாக இன்று 2 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி

*தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது

*இன்று மட்டும் தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு

*மேலும் ஒரு திருநங்கைக்கு கொரோனா தொற்று - இதுவரை 2 பேருக்கு வைரஸ் பாதிப்பு

*தமிழ்நாட்டில் இதுவரை 1485 பேர் குணமடைந்துள்ளனர் : சுகாதாரத்துறை

*கோயம்பேடு சந்தை தொடர்பால் இன்று அதிகம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மாவட்ட வாரியான விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு;
தமிழகத்தில் மேலும் 508 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,058- ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 46,433லிருந்து 46,711- ஆக உயர்ந்துள்ளதாக  மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 12,727 லிருந்து 13,161-ஆக அதிகரித்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 1,583- ஆக உயர்ந்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 508 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 1,485 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 76 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 33-ஆக உயர்ந்துள்ளது.

* தமிழகத்தில் இதுவரை 1,65,191 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்று மட்டும் 11,702 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 52 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 2,537 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* சென்னையில் மக்கள்தொகை அதிகம் என்பதால் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது.

* தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்பியவர்களுக்கு இதுவரை மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

* இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 2,745 ஆண்கள், 1,311 பெண்கள், 2 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் ஆரஞ்சு மண்டலங்களின் எண்ணிக்கை குறைந்து சிவப்பு மண்டலங்களாக மாறி வருகிறது.

* அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

* பாதுகாப்பு வளையத்திற்குள் தான் தமிழகம் உள்ளது.

* நீலகிரி மாவட்டத்தில் 25 நாட்களுக்கு பிறகு 4 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

* முதல் முறையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 மூதாட்டிகளுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

* சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2000-ஐ தாண்டியது. சென்னையில் இன்று 279 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 76 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று ஒரே நாளில் 76 பேர் மீண்ட நிலையில் இதுவரை 1,485 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். சென்னையை சேர்ந்த 56 வயது ஆண், 60 வயது பெண் கொரோனா தொற்றால் இன்று உயிரிழப்புஇதனையடுத்து கொரோனா பலி எண்ணிக்கை 33-ஆக உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad