Type Here to Get Search Results !

சென்னையில் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 3 பெண்கள் பலி

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 

சென்னையில் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 3 பெண்கள் பலி
தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் கொரோனா பாதிப்பு மற்றும் பரவலை, கட்டுப்படுத்தும் மற்றும் தடுப்பு பணிகளில் அரசு போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டு வருகிறது.  ஊரடங்கு அமலில் உள்ளது.  எனினும், மக்கள் ஒத்துழைப்பு அவசியம் என அரசு கூறி வருகிறது.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர்கள் உள்பட 3 பேர் நேற்று பலியாகினர்.  அவர்களில் ஒருவர் 77 வயது நிறைந்த சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்தவர்.  மற்றொருவர் கோயம்பேடு சந்தையை சேர்ந்த 56 வயது காய்கறி வியாபாரி ஆவார்.  இவர்கள் 2 பேருக்கும் முன்பே உடல்நல பாதிப்பு இருந்து வந்துள்ளது.

இவர்கள் தவிர சூளைமேட்டை சேர்ந்த 80 வயது மூதாட்டி ஒருவரும் கொரோனா பாதிப்புக்கு நேற்று பலியானார்.  சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கடந்த 5ந்தேதி சிகிச்சைக்காக சேர்ந்த அவருக்கு முன்பே உடல்நல குறைவு ஏற்பட்டிருந்தது.  இதனால் தமிழகத்தில் பலி எண்ணிக்கை நேற்று 40 ஆக உயர்ந்து இருந்தது.

சென்னையில் இன்று ஒரே நாளில் மூச்சுத்திணறலுக்கு 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர். தேனாம்பேட்டையைச் சேர்ந்த 61 வயது மூதாட்டி மாங்காட்டைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளார். சென்னை தாம்பரம் அருகே சேலையூரைச் சேர்ந்த 53 வயது பெண் மூச்சுத்திணறலுக்கு உயிரிழந்தனர். மூச்சுத்திணறலால் 3 பெறும் உயிரிழந்ததால் அவர்களின் சளி மாதிரி கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனால், சென்னையில் கொரோனா பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வடைந்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad