Type Here to Get Search Results !

தாய், மகள் உள்பட 3 பேருக்கு கொரோனா பரவியது எப்படி? சுகாதாரத்துறை இயக்குனர்; ஊரடங்கினால் நிறுத்தி வைக்கப்பட்ட மேம்பாலம் அமைக்கும் பணி 50 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடக்கம்

தாய், மகள் உள்பட 3 பேருக்கு கொரோனா பரவியது எப்படி? சுகாதாரத்துறை இயக்குனர் 
புதுச்சேரி அரும்பார்த்தபுரத்தை சேர்ந்த தனியார் கம்பெனி ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதியானது. இதனையடுத்து அவரது குடும்பத்தினர், நண்பர்கள், அவருடன் பணிபுரிந்தவர்கள் மற்றும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என 40 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவரது மனைவி, மகள் மற்றும் நெட்டப்பாக்கத்தை சேர்ந்த நண்பருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதன் மூலம் கதிர்காமம் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் நோய் தொற்றால் சிகிச்சை பெற்று வருபவர் களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. காரைக்காலில் ஒருவர் சிகிச்சை பெற்று வருகின்றார். ஜிப்மரில் 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் ஒட்டுமொத்தமாக புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவுக்கு 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

3 பேருக்கு தொற்று பரவியது எப்படி?

இந்த வைரஸ் எவ்வாறு பரவியது என்பது குறித்து ஆராய்ந்தோம். பண்ருட்டியைச் சேர்ந்த பெண் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அந்த வார்டில் நெட்டப்பாக்கத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரின் தாயாரும் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இதில் பண்ருட்டி, பெண்ணுக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து அந்த வார்டில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

ஜிப்மர் மருத்துவமனை சென்று தாயின் உடல்நலனை பார்த்து வந்த நபருக்கு கொரோனா வைரஸ் ஒட்டியுள்ளது. அவர் மூலமாக அவரின் நண்பரான அரும்பார்த்தபுரத்தை சேர்ந்த நபருக்கும் தொற்று பரவியது உறுதியானது. சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மனைவி, மகள், நண்பர்களுடன் பழகியதன் காரணமாக தற்போது அவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கவனமாக இருக்கவேண்டும்

கொரோனா தொற்று எளிதாகவும், வேகமாகவும் பரவக் கூடியது என்பதை மக்கள் இதன் பிறகாவது உணர வேண்டும். சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும். வருகின்ற 17-ந் தேதிக்கு பின் ஊரடங்கில் மேலும் கட்டுப்பாடுகள் தளர்வு இருக்கும். அப்போது கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கடலூர், விழுப்புரத்தை சேர்ந்தவர்கள் புதுச்சேரிக்கு அதிகம் வருவார்கள். நாம் கவனக்குறைவாக இருந்தால் கொரோனா தொற்று வேகமாக பரவும்.

எனவே கொரோனா அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையையோ, கதிர்காமத்தில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையையோ தைரியமாக அணுகலாம். விழிப்புடன் இருந்து சமூக இடைவெளியை கடைபிடிப்பது முககவசம் அணிதல், கைகளை கழுவுதல் ஆகியவற்றை செய்து கொரோனா பரவுவதை தடுக்கலாம். இல்லை என்றால் இதுவரை சுகாதாரத்துறை ஊழியர்கள், காவல்துறையினர், நகராட்சி ஊழியர்கள், இணைந்து பணியாற்றியது வீணாகிவிடும்.

ஊரடங்கினால் நிறுத்தி வைக்கப்பட்ட மேம்பாலம் அமைக்கும் பணி 50 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடக்கம்
திருவண்ணாமலையில் உள்ள திண்டிவனம் சாலையில் ரெயில் தண்டவாளத்தை மையமாக கொண்டு ரூ.30 கோடியே 38 லட்சம் மதிப்பில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. மேலும் தண்டவாளத்தின் இடையில் உள்ள இணைப்பு பாலம் ரு.2 கோடியில் அமைக்கப்பட உள்ளது. தாலுகா அலுவலகத்தில் தொடங்கி நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகில் நிறைவடைகிறது. இந்த மேம்பாலத்தின் இருபுறமும் 7 மீட்டர் அகலத்திற்கு சர்வீஸ் சாலை அமைக்கப்படுகிறது. மேம்பாலத்தின் இருபுறமும் நடைபாதையுடன் கூடிய வடிகால்வாய்கள் அமைக்கப்படுகிறது. மேலும் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பாதசாரிகள் ஓய்வு எடுப்பதற்கு மேம்பாலத்தின் கீழ் மேடையும் அமைக்கப்படுகிறது.

இந்த மேம்பாலம் அமைக்கும் பணி மிகவும் தீவிரமாக நடைபெற்று வந்தது. இதற்காக திண்டிவனம் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. திண்டிவனம் சாலையில் நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் உள்ள பகுதியில் மேம்பால பணிகள் நிறைவடைந்த நிலையில் தாலுகா அலுவலகம் உள்ள பகுதியில் பில்லர்கள் அமைத்து மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வந்தது.

இதற்கிடையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மத்திய, மாநில அரசுகள் மூலம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் கட்டுமான தொழில்கள் உள்பட பல்வேறு தொழில்கள் முடங்கின. இதனால் மேம்பாலம் அமைக்கும் பணியும் நிறுத்தப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டன. அதில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி கடந்த 50 நாட்களுக்கு பிறகு மீண்டும் மேம்பால கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கடந்த 50 நாட்களுக்கு பிறகு தொடங்கி ஓரிரு நாட்களாக பணிகள் நடந்து வருகிறது. இதில் 30க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad