Type Here to Get Search Results !

கொரோனா சென்னையின் நிலை என்ன? சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து அரியலூர், கடலூர் வந்த 27 பேருக்கு கொரோனா; பாதிப்பிலிருந்து மீண்டது சிவகங்கை

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 
கொரோனா பரவல் - சென்னையின் நிலை என்ன?
சென்னையில் தொற்று பாதித்தவர்களில் ஆண்கள் 63.01% பேரும், பெண்கள் 36.99% பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னையில் கொரோனா தொற்றால் ஐந்து மண்டலங்களில் 100 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

சென்னையில் ராயபுரம், திரு,.வி,க.நகர், தேனாம்பேட்டையைத் தொடர்ந்து, தற்போது தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம் மண்டலங்களிலும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 100-ஐக் கடந்துள்ளது.

தமிழகத்தில் இன்று உறுதி செய்யப்பட்ட 203 தொற்றுகளில் 176 தொற்று சென்னையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் பாதித்துள்ள 1082 நபர்களில், 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில், குணமடைந்துள்ளவர்கள் எண்ணிக்கை 219-ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக தொற்று எண்ணிக்கை 200-ஐ கடந்திருக்கிறது. சென்னையில் இன்று அதிகபட்சமாக திரு.வி.க நகர் மண்டலத்தில் 48 நபரும், தண்டையார்பேட்டையில் 24 நபரும், வளசரவாக்கத்தில் 20 நபரும், கோடம்பாக்கத்தில் 19 நபரும், ராயபுரத்தில் 17 பேரும், அண்ணாநகரில் 6 பேரும், அமபத்தூரில் 6 நபரும், திருவொற்றியூரில் 3 நபரும், மணலி, அடையாறில் தலா ஒருவரும் பாதித்து உள்ளனர்.

குணமடைந்தவர்கள்
சென்னையில் தண்டையாபேட்டை, திரு.வி.க.., நகர், வளசரவாக்கத்தில் தலா ஒருவர் என மூன்று பேர் மட்டுமே குணமடைந்துள்ளனர். சென்னை கோடம்பாக்கத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மண்டலம் வாரியாக

இதுவரை திரு.வி.க நகரில் 259 பேரும்,  ராயபுரத்தில் 216 பேரும்,  தேனாம்பேட்டையில் 132 பேரும், கோடம்பாக்கத்தில் 116 பேரும், தண்டையார்ப்பேட்டையில் 101 பேரும், அண்ணாநகரில் 91 பேரும் பாதித்து உள்ளனர். மேலும், வளசரவாக்கத்தில் 60 பேரும், அம்பத்தூரில் 33 பேரும், அடையாறில் 21 பேரும்,  திருவொற்றியூரில் 19 பேரும்,  ஆலந்தூரில் 9 பேரும், பெருங்குடியில் 9 பேரும், மாதவரத்தில் 4 பேரும்,  சோழிங்கநல்லூரில் 3 பேரும், மணலியில் 3 நபரும் உள்ளனர்.

சென்னையில் தொற்று பாதித்தவர்களில் ஆண்கள் 63.01% பேரும், பெண்கள் 36.99% பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

வயது வாரியாக பார்க்கையில்
30 முதல் 39 வயது வரை உள்ள நபர்கள் 237 பேருக்கும், அதிகபட்சமாக 20 முதல் 29 வயது வரை உள்ள நபர்களில் 242 பேருக்கும், தொற்று உள்ளது. குறைந்தபட்சமாக 9 வயதுக்கு கீழ் 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 80 வயதுக்கு மேல் 13 பேரும் பாதித்து உள்ளனர். 10 முதல் 19 வயதுள்ளோர் 109 பேருக்கும்,  40 முதல் 49 வயதுள்ளோர் 195 பேருக்கும், 50 முதல் 59 வயதுள்ளோர் 137 பேருக்கும், 60 முதல் 69 வயதுள்ளோர் 81 பேருக்கும், 70 முதல் 79 வயதுள்ளோர் 28 பேருக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

சென்னை அடுத்த மாங்காடு காவல் நிலைய ஆய்வாளர் மனைவி, மகனுக்கு கொரோனா உறுதி
சென்னை அடுத்த மாங்காடு காவல் நிலைய ஆய்வாளர் மனைவி, மகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளருக்கு ஏற்கனவே கொரோனா உறுதியான நிலையில் அவரது மனைவி, மகனுக்கும் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்டது சிவகங்கை மாவட்டம்
சிவகங்கை மாவட்டத்தில் கொரோவால் சிகிச்சை பெற்று வந்த நபர் குணமடைந்தார். கொரோனா தொற்றால் 12 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 11 பேர் முன்பே குணமடைந்தனர். சிவகங்கை மாவட்டம் நோய் தொற்று இல்லாத மாவட்டமாகிறது.

சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து அரியலூர் சென்ற 20 பேருக்கும் கடலூர் வந்த 7 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி: மாவட்ட நிர்வாகம்
சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து அரியலூர் சென்ற 20 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் அரியலூரைச் சேர்ந்த 19 பேரும், பெரம்பலூரைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூர் வந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூர் திரும்பிய 600 தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா பாதித்த 7 பேரும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad