Type Here to Get Search Results !

மதுபானம் வீடுகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும்- சுப்ரீம் கோர்ட்; கொரோனா பாதித்தவர்களுக்கு விதவிதமான பல புதிய அறிகுறிகள்; 2,570 செவிலியர்களை பணியமர்த்த முதல்வர் பழனிசாமி உத்தரவு

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 

மதுபானம் வீடுகளுக்கு விநியோகம் செய்ய மாநிலங்கள் பரிசீலிக்க வேண்டும்- சுப்ரீம் கோர்ட்
நாடு முழுவதும் உள்ள மதுபானக் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும் , சமூக தொலைதூர நெறிமுறைகளை அமல்படுத்துவதற்கும் மறைமுக விற்பனை மற்றும்  வீட்டு முகவரியில் விநியோகிப்பது  குறித்து பரிசீலிக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,

ஊரடங்கு காலத்தில் மதுபானங்களை நேரடியாக கடைகள் மூலம் விற்பனை செய்வதற்கு தடை விதிக்க வேண்டும்  என்று சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.

நீதிபதிகள் அசோக் பூஷண், சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை வீடியோ கான்பரன்சிங் விசாரித்தது.

நாங்கள் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க மாட்டோம், ஆனால் சமூக தொலைதூரத்தை பராமரிக்க மாநிலங்கள் வீட்டு விநியோகம் செய்வது அல்லது மறைமுகமாக மதுபானம் விற்பனை செய்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் நீதிபதிகள் கூறினர்

பயன்பாட்டு அடிப்படையிலான உணவு விநியோக நிறுவனமான ஜுமாடோ, மதுபானத்தை வீட்டுக்கு வழங்குவதைப் பற்றி பரிசீலித்து வருவதாக செய்தி நிறுவன ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தற்போது வீட்டுக்கு மதுபானம் வழங்குவதற்கான சட்டப்பூர்வ ஏற்பாடுகள் எதுவும் இல்லை, ஏதோ ஒரு தொழில்துறை அமைப்பு இன்டர்நேஷனல் ஸ்பிரிட்ஸ் அண்ட் ஒயின்கள் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (ஐ.எஸ்.டபிள்யு.ஐ.ஐ), ஜுமாடோ மற்றும் பல நிறுவனக்கள் விநியோகம் செய்ய விளம்பரம் செய்து வருகின்றன.

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு 2,570 செவிலியர்களை பணியமர்த்த முதல்வர் பழனிசாமி உத்தரவு
தமிழகத்தில் கொரோனா தடுப்புப்பணியில் 2,570 செவிலியர்களை பணியமர்த்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 190க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்பில் இந்தியளவில் 4-வது இடத்தில் உள்ள தமிழகத்திலும் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இருப்பினும், வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர் ஆகியோர் தீவிர தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், பாதிக்கப்பட்டவர்களை கவனிக்க கூடுதல் செவிலியர்கள் தேவைப்படுவதாக தெரிகிறது. இதனையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மேலும் 2,570 செவிலியர்களை 6 மாத கால ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 6 மாத கால ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் 3 நாட்களுக்குள் பணியில் சேர செவிலியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மருத்துவகல்லூரி, தலைமை மருத்துவமனைகளில் தலா 40 பேர் பணியமர்த்தப்படுவார்கள்; தாலுகா மருத்துவமனைகளில் தேவைக்கேற்ப 10 முதல் 30 பேர் பணியமர்த்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா தடுப்பு பணிகள் மேலும் வலுவடையும் என்றும் தமிழக அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

கொரோனா பாதித்தவர்களுக்கு விதவிதமான பல புதிய அறிகுறிகள்- டாக்டர்கள் குழப்பம்
உலக அளவில் கொரோனா வைரஸ் தொடர்பாக தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கொரோனா பாதித்தவர்களுக்கு பல புதிய அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

வறட்டு இருமல், காய்ச்சல், உடல்சோர்வு ஆகியவை கொரோனாவின் பொதுவான அறிகுறிகள். இவற்றுடன் உடல் வலி, சளி, தொண்டை வறட்சி போன்றவையும் கொரோனாவின் அறிகுறிகளாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு அறிதாக வயிற்றுப்போக்கும் ஏற்படுவதும் பின்னர் கண்டறியப்பட்டது.

தற்போது கொரோனா பெரும்பாலும் அறிகுறியே இல்லாமல் பரவுவதாக கூறப்படும் நிலையில், வாசனை இழப்பும் சுவை இழப்பும் கொரோனாவின் அடையாளங்களாக தெரிவித்துள்ள ஆய்வாளர்கள், இத்தகைய நபர்கள் தொடக்கத்திலேயே தனிமைப்படுத்திக் கொண்டால் பிற உயிர்களுக்குப் பரவாமல் தடுக்க முடியும் என்றும் பல உயிர்களை காப்பாற்ற முடியும் என்றும் தெரிவித்துள்ளனர். வாசனை மற்றும் சுவை இழப்புடன் இருமலும் மூச்சு விடுவதில் சிரமும் இருந்தால் அது நிச்சயம் கொரோனாவின் அடையாளம்தான் என்றும் இங்கிலாந்து அறிவியல் நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் பல அறிகுறிகள் தென்படுவதாக, ஐரோப்பிய அறிவியல் இதழ் தெரிவித்துள்ளது. இத்தாலியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் சிறுவயதுபருவத்தினருக்கு, கால் பாதங்களில் அரிப்பு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

பாதத்தின் அடிப்பபுறத்திலும், பக்க வாட்டிலும் தோலின் நிறம் பழுப்பாக மாறுவதுடன் அரிப்பு ஏற்படுவதும் கொரோனாவின் அறிகுறியே என்று அந்த ஆய்விதழ் தெரிவித்துள்ளது. இதேபோன்று, கொரோனா பாதித்த சிலருக்கு கை மற்றும் விரல்களிலும் இதுபோன்ற அரிப்பு ஏற்படுவதை அந்த ஆய்விதழ் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த புதிய அறிகுறிக்கு "கோவிட் பாதம்" என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதேபோல் கொரோனா வைரஸ் சுவாச மண்டலத்தின் மேல் பகுதியை பாதிக்கும்போது அதன் தொடர்ச்சியாக கண்கள் இளஞ்சிப்பாக மாறுவதும் கொரோனாவின் அறிகுறியே என்று கூறுகின்றனர் இங்கிலாந்து கண் டாக்டர்கள்.

ஸ்பெயின் டாக்டர்கள் மேற்கொண்ட ஆய்வில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த ஓட்டம் தடை படுவதால் தோலின் நிறம் மாறுவதை கண்டுபிடித்துள்ளனர். 375 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 6 சதவீதம்பேருக்கு இந்த அறிகுறி தென்பட்டுள்ளது. இதன்படி, தோலின் நிறம் பழுப்பாகவோ அல்லது இளஞ்சிவப்பு பட்டையாக மாறுவதும் கொரோனாவின் அறிகுறியாக கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 214 பேருக்கு மேற்காள்ளப்பட்ட ஆய்வில் 36 சதவீதம் பேருக்கு நரம்பு மண்டல பாதிப்பால் ஏற்படும் மயக்கம் மற்றும் தலைவலி ஆகிய அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நியூயார்க் டாக்டர்கள் மேற்கொண்ட ஆய்வில், உடல் எரிச்சலும் கொரேனாவின் அறிகுறியாக கண்டறியப்பட்டுள்ளது. உடலில் எதிர்ப்பு சக்தி உருவாவதன் அளவின் அடிப்படையில் இந்த அறிகுறி தென்படும் என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது, அதிக அளவு எதிர்ப்பு சக்தி உருவாகும் பட்சத்தில் அது உடல் எரிச்சலை ஏற்படுத்தும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad