Type Here to Get Search Results !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,609 பேருக்கு கொரோனா; இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,12,359 ஆக உயர்ந்துள்ளது

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,609 பேருக்கு கொரோனா; இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,12,359- ஆக உயர்ந்துள்ளது
சீனாவில் உருவான கோவிட்-19 என பெயரிடப்பட்ட கொரோனா வைரஸ் உலகில் உள்ள 200-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி இதுவரை 50 லட்சத்துக்கும் அதிகமானோரை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்த வைரஸ் தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவில், கொரோனா அமெரிக்கா, ஸ்பெயின், பிரேசில் உள்ளிட்ட சில நாடுகளை போன்று அதிக பாதிப்பு ஏற்படுத்தவில்லை என்றாலும், தன்னால் முடிந்தவரை ஊரடங்கு மத்தியில் பலரை பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினமே இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது.

இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தரவுகளின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,609-பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,12,359- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை  45300- ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை  3435 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 132 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

மராட்டிய மாநிலத்தில் மட்டும் கொரோனா 39,297 -பேரை நோய் பாதிப்புக்கு ஆளாக்கி இருக்கிறது. தமிழகத்தில் புதிதாக 743 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12,448-ல் இருந்து 13,191 ஆக உயர்ந்துள்ளது. குஜராத்திலும் இந்த எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்துவிட்டது.  குஜராத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 12537- ஆக உள்ளது.  டெல்லியில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை   11,088- ஆக உள்ளது.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 39,297 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1390 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 10318 பேர்  குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் மீண்டும் 2-வது இடத்திற்கு வந்துள்ளது. தமிழகத்தில் 13,191 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதுவரை 87 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 5882 பேர் குணமடைந்துள்ளனர். குஜராத் மாநிலம் 3-வது இடத்தில் உள்ளது. குஜராத் மாநிலத்தில் 12,537 பேருக்கு தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 749 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 5219 பேர் குணமடைந்துள்ளனர்.

மாநில வாரியாக விவரம்:

அசாமில் 170 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 48 பேர் குணமடைந்தது.
பீகாரில் 1674 பேருக்கு பாதிப்பு; 10 பேர் பலி; 571 பேர் குணமடைந்தது.
சண்டிகரில் 202 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 57 பேர் குணமடைந்தது.
சத்தீஸ்கரில் 115 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 59 பேர் குணமடைந்தது.

கோவாவில் 50 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 7 பேர் குணமடைந்தது.
டெல்லியில் 11088 பேருக்கு பாதிப்பு; 176 பேர் பலி; 5192 பேர் குணமடைந்தது.
அரியானாவில் 993 பேருக்கு பாதிப்பு; 14 பேர் பலி; 648 பேர் குணமடைந்தது.
திரிபுராவில் 173 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 133 பேர் குணமடைந்தது.

கேரளாவில் 666 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 502 பேர் குணமடைந்தது.
ராஜஸ்தானில் 6015 பேருக்கு பாதிப்பு; 147 பேர் பலி; 3404 பேர் குணமடைந்தது.
ஜார்கண்டில் 231 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 127 பேர் குணமடைந்தது.
லடாக்கில் 44 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 43 பேர் குணமடைந்தது.

மணிப்பூரில் 25 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 2 பேர் குணமடைந்தது.
மேகலாயாவில் 14 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 12 பேர் குணமடைந்தது.
மிஸ்ரோமில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.
ஒடிசாவில் 1052 பேருக்கு பாதிப்பு; 6 பேர் பலி; 307 பேர் குணமடைந்தது.

பாணடிச்சேரி 18 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 9 பேர் குணமடைந்தது.
பாஞ்சாப்பில் 2005 பேருக்கு பாதிப்பு; 38 பேர் பலி; 1794 பேர் குணமடைந்தது.
உத்தரகாண்ட்டில் 122 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 53 பேர் குணமடைந்தது.
கர்நாடகாவில் 1462 பேருக்கு பாதிப்பு; 41 பேர் பலி; 556 பேர் குணமடைந்தது.

ஜம்மு காஷ்மீரில் 1390 பேருக்கு பாதிப்பு; 18 பேர் பலி; 678 பேர் குணமடைந்தது.
தெலுங்கானாவில் 1661 பேருக்கு பாதிப்பு; 40 பேர் பலி; 1015 பேர் குணமடைந்தது.
மேற்கு வங்கத்தில் 3103 பேருக்கு பாதிப்பு; 253 பேர் பலி; 1136 பேர் குணமடைந்தது.
உத்தரப்பிரதேசத்தில் 5175 பேருக்கு பாதிப்பு; 127 பேர் பலி; 3066 பேர் குணமடைந்தது.

ஆந்திரப்பிரதேசத்தில் 2602 பேருக்கு பாதிப்பு; 53 பேர் பலி; 1640 பேர் குணமடைந்தது.
மத்தியப்பிரதேசத்தில் 5735 பேருக்கு பாதிப்பு; 267 பேர் பலி; 2733 பேர் குணமடைந்தது.
அருணாச்சலப்பிரதேசத்தில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.
இமாச்சலப்பிரதேசத்தில் 110 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 54 பேர் குணமடைந்தது.

அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 33 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 33 பேர் குணமடைந்தது.
தாதர் நகர் ஹவேலியில் 1 பேருக்கு பாதிப்பு; யாரும் குணமடையவில்லை; உயிரிழக்கவில்லை.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad