Type Here to Get Search Results !

கொரோனா பாதிப்பில் மருத்துவர் உயிரிழப்பு: பகுதி மக்களின் எதிர்ப்பால் அவசர அவசரமாக உடல் தகனம்; போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை - மு.க ஸ்டாலின்

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர். பகுதிவாசிகள் எதிர்ப்பால் குடும்ப உறுப்பினர்கள் யாரும் இன்றி அவசர அவசரமாக புதைக்கப்பட்ட அவலம்
கொரோனா தொற்றால் நேற்று உயிரிழந்த நரம்பியல் மருத்துவரின் உடலை புதைக்க, பகுதிவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களின் மண்டை உடைந்ததால், அவசர அவசர அவசரமாக உடன் வந்த மருத்துவரே குடும்ப உறுப்பினர்கள் யாரும் இல்லாமல் உடலை புதைக்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையின் இயக்குநர் இரண்டு வாரங்களுக்கு முன் கொரொனா தொற்று கண்டறியப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சைப் பலனிறி நேற்று உயிரிழந்தார். கீழ்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய மாநகராட்சி அனுமதி வாங்கி உள்ளனர்.

சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையின் இயக்குநர் இரண்டு வாரங்களுக்கு முன் கொரொனா தொற்று கண்டறியப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சைப் பலனிறி நேற்று உயிரிழந்தார்.

கீழ்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய மாநகராட்சி அனுமதி வாங்கி உள்ளனர். ஆனால் தகவல் தெரிந்து அங்கு மக்கள் கூட்டம் இருந்ததால், மாநகராட்சி அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி, கீழ்ப்பாக்கம் கல்லறை செல்லமால் நேரடியாக வேலப்பாங்காடு சுடுகாட்டிற்கு சென்று விட்டனர். அங்கும் தகவல் தெரிந்து மக்கள் கூடியதால் பிரச்சனை ஏற்பட்டது.

கொரோனா தொற்றுள்ள உடல் என்பதால் அவரது மனைவி, மகன் மற்றும் நண்பர்கள் வெகு சிலர் மட்டுமே உடலை எடுத்து சென்றுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்படவரின் உடலை இங்கே புதைக்கக் கூடாது என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கற்கள், கம்பு ஆகியவற்றுடன் வந்து ஆம்புலன்ஸை உடைத்து ஓட்டுநர்களை, மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்களை தாக்கியதாக உடன் சென்று மருத்துவ்ர் பிரதீப் நியூஸ்18- யிடம் தெரிவித்தார். ரத்தம் சொட்ட சொட்ட தப்பித்தோம், பிழைத்தோம் என ஈகா திரையரங்கு வரை ஆம்புலன்ஸை ஓட்டி வந்துள்ளனர்.

அதற்கு மேல் ஓட்டுநர்களால் ஓட்ட முடியாததால் படுகாயம் அடைந்த அவர்களை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்து விட்டு, அந்த மருத்துவர் PPE பாதுகாப்பு ஆடையை தானே அணிந்து கொண்டு, உடனிருந்த இரண்டு உதவியாளர்களுடன் மீண்டும் ஆம்புலன்ஸ் வேளங்காடு மயானத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். குடும்ப உறுப்பினர்கள் தாக்கப்படலாம் என்பதால் அவர்களை திருப்பி அனுப்பிவிட்டனர்.அவசர அவசரமாக யாரும் வருவதற்கு முன்னால், இறந்த மருத்துவரின் உடலை அவரே புதைத்துள்ளார். உடலை மூட மண் அள்ளிப் போட ஜே.சி.பி இயந்திரம் இயக்க யாரும் இல்லாததால் கையாலேயே மண்ணை அள்ளிப் போட்டுள்ளனர். பிறகு அருகில் இருந்த காவலர் உதவியுடன் மண்வெட்டி கொண்டு மண்ணை போட்டு மூடி அவசர அவசரமாக மீண்டும் அங்கிருந்து வெளியேறியுள்ளர்.

பல உயிர்களை காப்பாற்றிய ஒரு மருத்துவமனையின் இயக்குநரை மருத்துவராக பார்க்காவிட்டாலும், ஒரு மனிதனாகவாவது பார்க்க வேண்டும் என்று அவரது உடலை புதைத்த மற்ற மருத்துவர் கண்ணீர் மல்க நம்மிடம் கூறினார்.

இதற்கிடையே,  ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ பணியாளர்களை தாக்கியதாக 20 பேரை அண்ணா நகர் போலீசார், இன்று காலை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணைக்குப் பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், கலவரத்தில் ஈடுபடுதல், ஆயுதங்களால் தாக்குதல், சட்டவிரோதமாக தடுப்பில் வைத்து தாக்குதல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மக்கள் நலன் காப்பவர்களைப் பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை - மு.க ஸ்டாலின்
டாக்டர். சைமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். அந்தச் சோக நிகழ்வுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், டாக்டர். சைமன் குடும்பத்தார்க்கு இதயமார்ந்த ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

”மக்கள் நலன் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோரையும் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்கும் கடமையை ஆட்சியாளர்கள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். ஊரடங்கு விதிமுறைகளை தமிழக மக்கள் முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும்" என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகத்தையே அச்சுறுத்திவரும் கொரோனா நோய்த்தொற்றுக்கு தமிழகத்தில் மேலும் ஒரு மருத்துவர் பலியாகியிருப்பது கவலையையும் வேதனையையும் பதற்றத்தையும் அதிகப்படுத்துகிறது. சென்னையை அடுத்த வானகரத்தில் ஒரு தனியார் மருத்துமவனையில் கோவிட்-19 வைரஸ் பாசிட்டிவ்வால் சிகிச்சை பெற்றுவந்த 51 வயது நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர். சைமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். அந்தச் சோக நிகழ்வுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், டாக்டர். சைமன் குடும்பத்தார்க்கு இதயமார்ந்த ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து மக்களைக் காக்கும் பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் - செவிலியர்கள் உள்ளிட்டோர் அதே நோய்த்தொற்றுக்கு ஆளாவதும், அதுபோலவே, ‘ஊரடங்கு’ காவல் பணியில் இரவு பகல் பாராது எந்நேரமும் ஈடுபட்டுள்ள காவல்துறையினரும் நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருக்கும் செய்தியும், மனதில் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது.

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டு நாள்தோறும் களத்தில் நின்று செய்திகள் சேகரிக்கும் ஊடகத்தினருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது.

மூன்று நாட்களில் தமிழகத்தில் கொரோனா தொற்று ஒழிந்துவிடும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 16.4.2020 அன்று வர்க்க பேத ஆரூடம் கணித்து அறிவித்திருந்த நிலையில், நோய்த்தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களிடம் அவநம்பிக்கையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இத்தகைய சூழலில் மருத்துவரின் உயிரிழப்பு என்பது, வைரஸ் பரவலைத் தடுப்பதில் அ.தி.மு.க. அரசு சிறிதும் அலட்சியம் காட்டாமல் செயல்பட வேண்டிய அவசரத்தையும் அவசியத்தையும் மிகவும் வலியுறுத்துகிறது.விரைவு பரிசோதனைக் கருவிகள் வாயிலாக உரிய முறையிலும் மிகப் பரவலாகவும் சோதனைகள் நடத்தி, தொற்றின் அளவை மதிப்பீடு செய்து, அதனடிப்படையில் தடுப்பு மருத்துவ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய சூழல் தமிழகத்தில் நிலவுகிறது.

பொதுமக்களையும் மருத்துவர்கள் - காவல்துறையினர் - தூய்மைப் பணியாளர்கள் - ஊடகத்தினர் உள்ளிட்ட மக்கள் நலன் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோரையும் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்கும் முக்கியமான கடமையை ஆட்சியாளர்கள் போர்க்கால அடிப்படையில் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

மத்திய - மாநில அரசுகள் அறிவித்துள்ள ஊரடங்கின் விதிமுறைகளை, எத்தனை சிரமங்கள் இருந்தாலும், முழுமையாகக் கடைப்பிடித்து, தனித்திருந்து, தற்காத்துக் கொள்ளுமாறு தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad