Type Here to Get Search Results !

தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டும் மேலும் 76 பேருக்கு கொரோனா; தமிழக மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டோர் விவரம் வெளியீடு

தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டும் 76 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. சீனாவின் வூகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. இதனிடையே உலகளவில் உயிரிழப்பானது ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.

தமிழகத்தில் மேலும் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1596 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு இன்று ஒரே நாளில் 178 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியா உள்ளிட்ட 209 நாடுகளும் மேலாக கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை  ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த 14-ம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இருப்பினும், கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தினால், மே 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து, தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 635 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.  மாவட்டங்களில் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒருநாளில் மட்டும்  55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஒட்டு மொத்தமாக 358 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது” என்றார்.

சென்னையில் இன்று ஒரே நாளில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தீவிரம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இன்று மட்டும் 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1596 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.  சென்னையில் மொத்தம் 358 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் இன்று 5 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தலா 3 பேருக்கு இன்று புதிதாக கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மாவட்ட வாரியான விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு;
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,985-ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றால் 603 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 3,260 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த கொடிய வைரஸ் தமிழகத்திலும் கொடிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதி என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில் கூறியதாவது;

* சென்னையில் இன்று மட்டும் 55 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 358 ஆக அதிகரித்துள்ளது

* தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 18-ஆக உயர்ந்துள்ளது.

* தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 635 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 178 பேர் குணமடைந்துள்ளனர். கரூரில் 48, கோவையில் 31 பேர் குணமடைந்து வீடு திரும்புகின்றனர்.

* கொரோனா பாதித்தவர்களில் 17 பேர் மட்டும் பிராண வாயு உதவியுடன் சிகிச்சையில் உள்ளனர்.

*  தமிழகத்தில் இதுவரை 53,045 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

* தமிழகத்தில் 22,654 பேர் இதுவரை வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். 145 பேர் அரசு கண்காணிப்பில் உள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad