Type Here to Get Search Results !

தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) மட்டும் மேலும் 54 பேருக்கு கொரோனா; தமிழக மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டோர் விவரம் வெளியீடு

தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) மட்டும் 54 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. சீனாவின் வூகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. இதனிடையே உலகளவில் உயிரிழப்பானது ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 54 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1629-ல் இருந்து 1683 ஆக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 400- ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் 10-வயதுக்கு உட்பட்ட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்து 90 பேர் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம், இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை  752 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20-ஆக உள்ளது. இந்தத் தகவல்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

தற்போது, 908 பேர் கொரோனா பாதித்து சிகிச்சையில் இருந்துவருகின்றனர். இன்று இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்மூலம் சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 400 ஆக அதிகரித்துள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா உள்ளிட்ட 209 நாடுகளும் மேலாக கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை  ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த 14-ம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இருப்பினும், கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தினால், மே 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மாவட்ட வாரியான விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு;
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தீவிரம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இன்று மட்டும் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1683 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.  சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 400-ஆக உயர்ந்துள்ளது. தருமபுரி மாவட்டத்தில் முதல் முறையாக இன்று ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.  சேலம் மாவட்டத்தில் இன்று 5 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல்  மாவட்டத்தில் இன்று 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24  மணி நேரத்தில் 1409 பேருக்கு கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 21,700-ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 14 நாட்களில் 78 மாவட்டங்களில் புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏதும் பதிவாகவில்லை என்று தெரிவித்துள்ளது. இந்த கொடிய வைரஸ் தமிழகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 54 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 752 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 90 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

* கொரோனாவால் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 20-ஆக உயர்ந்துள்ளது.

* சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 27 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

* தமிழகத்தில் 23,303 பேர் இதுவரை வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். 106 பேர் அரசு கண்காணிப்பில் உள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை 65,977 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

சென்னையில் இன்று புதிதாக 27 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400-ஆக அதிகரித்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad