Type Here to Get Search Results !

தமிழகத்தில் இன்று (திங்கள்கிழமை) மட்டும் மேலும் 52 பேருக்கு கொரோனா; தமிழக மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டோர் விவரம் வெளியீடு

தமிழகத்தில் இன்று (திங்கள்கிழமை) மட்டும் 52 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. சீனாவின் வூகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. இதனிடையே உலகளவில் உயிரிழப்பானது இரண்டு லட்சத்தை தாண்டியுள்ளது.
தமிழகத்தில்  மேலும் 52 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1937 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1020-ல் இருந்து 1101 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,937 -ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை  தெரிவித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 60 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1020-ல் இருந்து 1101 ஆக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மாவட்ட வாரியான விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு;
கொரோனா தொற்று அறிகுறியுடன் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1937-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் வயதானவர்கள், எதிர்ப்புசக்தி குறைந்தவர்களைத்தான் பெரும்பாலும் பாதிக்கும் என்று கூறப்படுவதால் வயதானவர்கள் அதிக எச்சரிக்கையுடன் உள்ளனர்.

கொரோனா வைரஸ் முதலில் 55 வயதுக்கு மேற்பட்டோரைத்தான் அதிகமாக தாக்கி வந்தது. தற்போது குழந்தைகள் உள்பட வயது வித்தியாசம் பார்க்காமல் இந்நோய் பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1937 -ஆக உயர்ந்துள்ளது. அதன்படி விவரங்கள்;

^ இன்று பாதிக்கப்பட்டவர்கள்        : 33 ஆண்கள், 19 பெண்கள்

^ தமிழகத்தில் மொத்த பாதிப்பில் : 1,312 ஆண்கள், 625 பெண்கள்

^ 0-12 வயதுக்கு உட்பட்டவர்கள்    :  60ஆண், 51 பெண்; மொத்தம் 111

^ 13-60 வயதுக்கு உட்பட்டவர்கள்  :  1093ஆண்கள், 507 பெண்கள்; மொத்தம் 1,600

^ 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்     :  159 ஆண்கள், 67 பெண்கள்; மொத்தம் 226

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28,380-ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில்  கொரோனா தொற்றால் 886 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் இதுவரை 6,362 பேர் குணமடைந்துள்ளனர். இந்த கொடிய வைரஸ் தமிழகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 1,101 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 81 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று யாரும் உயிரிழக்கவில்லை. பலி எண்ணிக்கை 24-ஆக உள்ளது.

* சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை 570 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் 25,503 பேர் இதுவரை வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். 19 பேர் அரசு கண்காணிப்பில் உள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை 86,339 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்று மட்டும் 7,176 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 41 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 809 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களில் 56.84 % பேர் குணமடைந்துள்ளனர்.

* சென்னையில் மக்கள்தொகை அதிகம் என்பதால் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது.

* தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்பியவர்களுக்கு இதுவரை மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

* இன்று பாதிக்கப்பட்டவர்களில் 33 ஆண்கள், 19 பெண்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் இன்று சென்னை, மதுரை, விழுப்புரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad