Type Here to Get Search Results !

தமிழகத்தில் இன்று (திங்கள்கிழமை) மட்டும் மேலும் 43 பேருக்கு கொரோனா; தமிழக மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டோர் விவரம் வெளியீடு

தமிழகத்தில் இன்று (திங்கள்கிழமை) மட்டும் 43 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. சீனாவின் வூகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. இதனிடையே உலகளவில் உயிரிழப்பானது ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.

தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1520- ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியா உள்ளிட்ட 209 நாடுகளும் மேலாக கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை  ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த 14-ம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இருப்பினும், கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தினால், மே 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் இன்று மட்டும் 18 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
தமிழகத்தில் மொத்தம் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1520 ஆக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் கொரோனா  பாதிப்பில் இருந்து  மீண்டவர்களின் எண்ணிக்கை 411-ல் இருந்து 457 ஆக உயர்ந்துள்ளது.  இன்று ஒரே நாளில், கொரோனா பாதிப்பில் இருந்து 46 பேர் குணம் அடைந்துள்ளனர்.  கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கடந்த  24 மணி நேரத்தில் 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 17-ஆக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதித்தவர்களில் 17 பேர் மட்டும் பிராண வாயு உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17,656-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் 559 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை 2,842 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த கொடிய வைரஸ் தமிழகத்திலும் தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மாவட்ட வாரியான விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு;
இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1520- ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது;

* கொரோனா தொற்று பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.

* சென்னையில் மட்டும் இன்று 18 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 457 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 46 பேர் குணமடைந்துள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனா பாதித்து 1,043 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* கொரோனா பாதித்தவர்களில் 17 பேர் மட்டும் பிராண வாயு உதவியுடன் சிகிச்சையில் உள்ளனர்.

* தமிழகத்தில் புதிதாக புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

* இன்று ஒரே நாளில் 6,109 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 46,985 பேர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர்.

* கொரோனா வைரசால் உயிரிழப்பவர்களால் நோய் தொற்று பரவாது.

தமிழகத்தின் 22 மாவட்டங்களை ‘ஹாட் ஸ்பாட்’ - மத்திய அரசு
கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு இரண்டாவது முறையாக ஊரடங்கை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் பாதிப்பு அதிகம் உள்ளதால், மேலும் ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எனினும், இது தொடர்பாக அரசு அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தின் 22 மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகள் ஹாட் ஸ்பாட் என்று அழைக்கப்படுகின்றன. இந்த பகுதிகளில் கூடுதல் கவனம் எடுத்து மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகத்தின், சென்னை, திருச்சி, கோவை, நெல்லை, ஈரோடு, வேலூர், திண்டுக்கல், விழுப்புரம், திருப்பூர், தேனி, நாமக்கல், செங்கல்பட்டு, மதுரை, தூத்துக்குடி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, கடலூர், திருவள்ளூர், திருவாரூர், சேலம், நாகை ஆகிய மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், தஞ்சை, திருவண்ணாமலை, காஞ்சி, சிவகங்கை, நீலகிரி, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட்களாக மாறலாம் என்றும் மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad