Type Here to Get Search Results !

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 31,332-ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 31,332-ஆக உயர்வு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,007-ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,332-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,007-லிருந்து 308-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 7,696-ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  நாட்டில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை நேற்று 934 ஆக உயர்வடைந்து இருந்தது.  6,869 பேர் குணமடைந்தும், 21,632 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 934ல் இருந்து 1,007 ஆக இன்று உயர்வடைந்து உள்ளது.  7,696 பேர் குணமடைந்தும், 31,332 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.  இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 29,435ல் இருந்து 31,332 ஆக உயர்வடைந்து உள்ளது.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 9318 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி   செய்யப்பட்டுள்ளது. இதுவரை 400 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1388 பேர் குணமடைந்துள்ளனர். அடுத்த  இடத்தில் 3744 பேருக்கு தொற்று பாதிப்புடன் குஜராத் மாநிலம் 2ம் இடத்தில் உள்ளது. அங்கு, 181 பேர்    உயிரிழந்துள்ள நிலையில், 434 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் 6-வது இடத்தில்   உள்ளது. கடந்த 3 நாட்கள் 7-வது இடத்தில் இருந்த தமிழ்நாடு இன்று மீண்டும் 6-வது இடத்தில் உள்ளது   குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் 2058 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 25   பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1168 பேர் குணமடைந்துள்ளனர்.

மாநில வாரியாக விவரம்:

அசாமில் 38 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 27 பேர் குணமடைந்தது.
பிகாரில் 366 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 64 பேர் குணமடைந்தது.
சண்டிகரில் 56 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 17 பேர் குணமடைந்தது.
சத்தீஸ்கரில் 38 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 34 பேர் குணமடைந்தது.

கோவாவில் 7 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 7 பேர் குணமடைந்தது.
டெல்லியில் 3314 பேருக்கு பாதிப்பு; 54 பேர் பலி; 1078 பேர் குணமடைந்தது.
அரியானாவில் 310 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 209 பேர் குணமடைந்தது.
திரிபுராவில் 2 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 2 பேர் குணமடைந்தது.

கேரளாவில் 485 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 359 பேர் குணமடைந்தது.
ராஜஸ்தானில் 2364 பேருக்கு பாதிப்பு; 51 பேர் பலி; 768 பேர் குணமடைந்தது.
ஜார்கண்டில் 103 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 17 பேர் குணமடைந்தது.
லடாக்கில் 22 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 16 பேர் குணமடைந்தது.

மணிப்பூரில் 2 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 2 பேர் குணமடைந்தது.
மேகலாயாவில் 12 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.
மிஸ்ரோமில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.
ஒடிசாவில் 118 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 38 பேர் குணமடைந்தது.

பாணடிச்சேரி 8 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 3 பேர் குணமடைந்தது.
நாகாலாந்தில் 0 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.
பாஞ்சாப்பில் 322 பேருக்கு பாதிப்பு; 19 பேர் பலி; 71 பேர் குணமடைந்தது.
உத்தரகண்ட்டில் 54 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 33 பேர் குணமடைந்தது.

கர்நாடகாவில் 523 பேருக்கு பாதிப்பு; 20 பேர் பலி; 207 பேர் குணமடைந்தது.
ஜம்மு காஷ்மீரில் 565 பேருக்கு பாதிப்பு; 8 பேர் பலி; 176 பேர் குணமடைந்தது.
தெலுங்கானாவில் 1004 பேருக்கு பாதிப்பு; 26 பேர் பலி; 321 பேர் குணமடைந்தது.
மேற்கு வங்கத்தில் 725 பேருக்கு பாதிப்பு; 22 பேர் பலி; 119 பேர் குணமடைந்தது.

ஆந்திரப்பிரதேசத்தில் 1259 பேருக்கு பாதிப்பு; 31 பேர் பலி; 258 பேர் குணமடைந்தது.
மத்தியப்பிரதேசத்தில் 2387 பேருக்கு பாதிப்பு; 120 பேர் பலி; 377 பேர் குணமடைந்தது.
உத்தரப்பிரதேசத்தில் 2053 பேருக்கு பாதிப்பு; 34 பேர் பலி; 462 பேர் குணமடைந்தது.
அருணாச்சலப்பிரதேசத்தில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.

இமாச்சலப்பிரதேசத்தில் 40 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 25 பேர் குணமடைந்தது.
அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 33 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 15 பேர் குணமடைந்தது.

தாராவியை மிரட்டும் கொரோனா: ஒரே நாளில் 42 பேருக்கு தொற்று - 4 பேர் பலி
ஆட்கொல்லி கொரோனா வைரஸ் மும்பை தாராவியை மிரட்டி வருகிறது. ஒரே நாளில் 42 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் 4 பேர் பலியாகி உள்ளனர்.

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் தமிழர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இங்கு ஆட்கொல்லி கொரோனா மிரட்டி வருகிறது. கடந்த 1-ந் தேதி துணிக்கடைக்காரர் ஒருவர் கொரோனாவுக்கு பலியானார். இதை அடுத்து தாராவியில் நோய் தொற்று அசுர வேகத்தில் பரவி வருகிறது.

இந்நிலையில் நேற்று ஒரேநாளில் மட்டும் இங்கு 42 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதில் 33 பேர் ஆண்கள். 9 பேர் பெண்கள். அதிகபட்சமாக 90 அடி சாலை பகுதியில் 7 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மற்றவர்கள் சோசியல்நகர், மாட்டுங்கா லேபர் கேம்ப், குஞ்ச் குருவேநகர், ஆசாத் நகர், சஞ்சய்காந்தி நகர், பிலா பங்களா, முகுந்த்நகர், முஸ்லிம்நகர், கல்யாணவாடி, இந்திராநகர், நியூ முனிசிபல்சால், மார்கண்டேயா சொசைட்டி, தோபிகாட், ராஜூவ் காந்திநகர், 60 அடி ரோடு, கிராஸ்ரோடு, மொச்சி கல்லி, சதாப்திநகர், பி.வி. சால், ஆகாஸ்வாடி, உதய் சொசைட்டி பகுதிகளை சேர்ந்தவர்கள்.

ஒரே நாளில் 42 பேருக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டதன் மூலம் தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 330 ஆக உயர்ந்து உள்ளது.

4 பேர் பலி

இதேபோல தாராவியில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலியாகி உள்ளனர். இதில் 3 பேர் ஆண்கள். ஒருவர் பெண். இதன்மூலம் இங்கு நோய் பாதிப்புக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்து உள்ளது.

தாராவியில் ஒரே நாளில் 42 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதும், 4 பேர் பலியாகி இருப்பதும் இதுவே முதல் முறையாகும். மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து வருவது அங்கு வசிக்கும் மக்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad