Type Here to Get Search Results !

தமிழகத்தில் இன்று (செவ்வாய்கிழமை) மட்டும் 31 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1173-லிருந்து 1204 -ஆக உயர்வு

தமிழகத்தில் இன்று (செவ்வாய்கிழமை) மட்டும் மேலும் 31 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் இன்று (செவ்வாய்கிழமை) மட்டும் 31 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்  தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 1204ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும் வீட்டுக் கண்காணிப்பில் 33,850 பேர் உள்ளதாகவும், 81 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவித்தார்.

சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

இன்று புதிதாக 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருமே கண்காணிப்பில் இருந்தவர்கள். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1204 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12 ஆக உள்ளது. குணமடைந்த பின்னரும் கட்டாயமாக அவர்களை மருத்துவமனையில் வைத்து கண்காணிக்கிறோம். அதனால், அவர்கள் வீடு திரும்புவதில் தாமதம் ஏற்படுகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. பின்னடைவே இல்லை.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்குள் ஏற்பட்ட பாதிப்பு மட்டுமே என்று தெரிவித்துள்ளார்.

மொத்தம் 81 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்

தமிழகத்தில் அரசு ஆய்வகங்கள் 25, தனியார் ஆய்வகங்கள் 9 உள்ளன

கொரோனா பாதிப்பு நிலவரம்

தமிழகத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது

இன்று 31 பேர் உள்பட மொத்தம் 1204 பேருக்கு கொரோனா பாதிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

சென்னையில் மேலும் 5 பேர் பாதிப்பு - மொத்த எண்ணிக்கை 210 ஆக உயர்வு

தஞ்சாவூர் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி

மதுரை, நாகப்பட்டினம், ராமநாதபுரத்தில் தலா 2 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் 10 வயதுக்கு உட்பட்ட 33 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad