Type Here to Get Search Results !

நெல்லை அருகே, 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; தட்டிக்கேட்ட தாயின் கை துண்டிப்பு - கார் டிரைவர் கைது

நெல்லை மூலைக்கரைப்பட்டி அருகே, 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; தட்டிக்கேட்ட தாயின் கை துண்டிப்பு - கார் டிரைவர் கைது
மூலைக்கரைப்பட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை தட்டிக்கேட்ட தாயின் கை அரிவாளால் துண்டிக்கப்பட்டது. இதுதொடர்பாக கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள கீழசிந்தாமணியை சேர்ந்தவர் லூர்துமணி (வயது 60), கார் டிரைவர். இவர் 15 வயதுடைய ஒரு சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும், செல்போனிலும் பேசி தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதை அந்த சிறுமி, தனது தாயிடம் கூறி உள்ளார். உடனே, அந்த சிறுமியின் தாய், லூர்துமணியிடம் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த லூர்துமணி, அந்த சிறுமியின் வீட்டிற்கு சென்று அவருடைய தாயை அரிவாளால் வெட்டினார். இதில் அவருடைய கை துண்டானது. தடுக்க சென்ற சிறுமிக்கும் சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது.

இதில் காயம் அடைந்த தாயும், மகளும் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து லூர்துமணியை கைது செய்தனர்.

மேட்டூர் அருகே, கட்டிட தொழிலாளி வெட்டிக்கொலை - மகன் வெறிச்செயல்
மேட்டூர் அருகே கட்டிட தொழிலாளியை மகன் வெட்டிக்கொலை செய்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள மோட்டூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் சக்தியண்ணன் (வயது 75). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி அய்யம்மாள். இவர்களது மகன் மதிவாணன் (35). இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். மதிவாணன் மனநலம் பாதிக்கப்பட்டு, அதற்காக டாக்டரிடம் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிமெண்டு பூச பயன்படுத்தப்படும் கலவை கரண்டியை எடுத்து மதிவாணன், தனது தந்தை சக்தியண்ணனை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து அவர் இறந்தார். இதைப்பார்த்து அய்யம்மாள் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கருமலைக்கூடல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து சக்தியண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வெறிச்செயலில் ஈடுபட்ட அவரது மகன் மதிவாணனை பிடித்துச்சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து போலீசார் கூறுகையில், மனநலம் பாதிக்கப்பட்டதால், தந்தை என்று கூட பாராமல், மதிவாணன், சக்தியண்ணனை வெட்டிக்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

இந்த சம்பவம் மேட்டூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad