Type Here to Get Search Results !

தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் மேலும் 105 பேருக்கு கொரோனா; தமிழக மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டோர் விவரம் வெளியீடு

தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் 105 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. சீனாவின் வூகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. இதனிடையே உலகளவில் உயிரிழப்பானது ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.

தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1477- ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியா உள்ளிட்ட 209 நாடுகளும் மேலாக கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை  ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த 14-ம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இருப்பினும், கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தினால், மே 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்1,334 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 15,000-ஐ தாண்டியுள்ளது. மேலும்  நாடு முழுவதும் கொரோனா தொற்று தொடர்பாக இதுவரை 3,86,791 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த கொடிய வைரஸ் தமிழகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1477- ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 365-லிருந்து 411-ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த  24 மணி நேரத்தில் யாரும்  உயிரிழக்கவில்லை,  பலி எண்ணிக்கை 15-ஆக உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 21,389 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 285 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மேலும் 4 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மாவட்ட வாரியான விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு;
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது. மூன்று தினங்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலின் வேகம் குறைந்திருந்த நிலையில் இன்று மீண்டும் 100-க் கடந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் குறித்த விவரத்தை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘இன்று மட்டும் தமிழகத்தில் 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக பார்க்கையில், சென்னையில் இன்று ஒரு நாளில் மட்டும் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த எண்ணிக்கையில், 4 முதுநிலை மருத்துவ மாணவர்கள், ஒரு பத்தாம் வகுப்பு மாணவனும் அடங்குவர்.  சென்னையில் ஒட்டு மொத்தமாக 285 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தஞ்சாவூரில் புதிதாக இன்று 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தஞ்சாவூரில் ஒட்டுமொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தின் 22 மாவட்டங்களை ‘ஹாட் ஸ்பாட்’ - மத்திய அரசு
கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு இரண்டாவது முறையாக ஊரடங்கை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் பாதிப்பு அதிகம் உள்ளதால், மேலும் ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எனினும், இது தொடர்பாக அரசு அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தின் 22 மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகள் ஹாட் ஸ்பாட் என்று அழைக்கப்படுகின்றன. இந்த பகுதிகளில் கூடுதல் கவனம் எடுத்து மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகத்தின், சென்னை, திருச்சி, கோவை, நெல்லை, ஈரோடு, வேலூர், திண்டுக்கல், விழுப்புரம், திருப்பூர், தேனி, நாமக்கல், செங்கல்பட்டு, மதுரை, தூத்துக்குடி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, கடலூர், திருவள்ளூர், திருவாரூர், சேலம், நாகை ஆகிய மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், தஞ்சை, திருவண்ணாமலை, காஞ்சி, சிவகங்கை, நீலகிரி, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட்களாக மாறலாம் என்றும் மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad