Type Here to Get Search Results !

கொரோனா பாதிப்பின் புதிய அறிகுறிகளை கண்டறிந்த மருத்துவர்கள்; ரூ.1000 விலையில் செப்டம்பர் மாத இறுதியில் கொரொனா தடுப்பூசி விற்பனைக்கு வரும்

கொரோனா வைரஸ் பாதிப்பின் புதிய அறிகுறிகளை அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கண்டறிந்து உள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் உகானில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று நோயாக மாறி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா  மருத்துவர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் ஒரு புரியாத புதிராக மாறி உள்ளது,

மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் கொரோனாவின் குணாதிசயங்களைக் கண்டறிய தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

உலக சுகாதார அமைப்பு கூறுகையில், சிலர் நோய்த்தொற்றுக்கு ஆளாகிறார்கள், ஆனால் மிகவும் லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளனர். பெரும்பாலான மக்கள் (சுமார் 80 சதவீதம்) மருத்துவமனை சிகிச்சை தேவையில்லாமல் நோயிலிருந்து மீண்டு வருகிறார்கள். கொரோனா பாதிக்கப்படும் ஒவ்வொரு ஐந்து பேரில் 1 நபர் கடுமையாக நோய்வாய்ப்பட்டு மூச்சு விடுவதில் சிரமத்தை சந்திக்கிறார்.

வயதானவர்கள், மற்றும் உயர் இரத்த அழுத்தம், இதயம் மற்றும் நுரையீரல் பிரச்சினைகள், நீரிழிவு நோய் அல்லது புற்றுநோய் போன்ற அடிப்படை மருத்துவ பிரச்சினைகள் உள்ளவர்கள் கடுமையாக நோய் தாக்கும் அபாயத்தில் உள்ளனர் என்று கூறி உள்ளது.

உலக சுகாதார அமைப்பின் இணைய தளத்தில் கொரோனா அறிகுறிகள் காய்ச்சல், வறட்டு இருமல், சோர்வு,  மற்றும் வலிகள், மூக்கு நமைச்சல், தொண்டை புண் மற்றும் வயிற்றுப்போக்கு என குறிப்பிடப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் உயர்மட்ட மருத்துவ கண்காணிப்புக் குழு,  கொரோனா வைரஸின் புதிய அறிகுறிகளை கண்டறிந்து உள்ளனர்.

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சிடிசி) உலகளவில் நோய்களைக் கண்காணித்து வருகின்றனர்.அதன் அதிகாரிகள் நேரடியாக மேம்பட்ட சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர்.. கொரோனா வைரஸ்  பாதிப்பின் புதிய அறிகுறிகளை இவர்கள் கண்டறிந்து உள்ளனர்

கொரோனா நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு பலவிதமான அறிகுறிகள் தென்படும். லேசான அறிகுறிகள் முதல் கடுமையான நோய் வரை. இந்த அறிகுறிகள் வைரஸை வெளிப்படுத்திய 2-14 நாட்களுக்குப் பிறகு தோன்றக்கூடும்.  காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும் என்று சிடிசி தனது இணையதளத்தில் ஏற்கனவே வெளியிட்டு உள்ளது.

தற்போது கொரோனா பாதிப்பின் புதிய அறிகுறிகளை தனது இணையதளத்தில் சிடிசி சேர்த்து உள்ளது. அது குளிருடன் மீண்டும் மீண்டும் நடுங்குதல், தசை வலி, தலைவலி மற்றும் சுவை அல்லது வாசனை இழப்பு ஆகியவை அடங்கும்.

சிடிசி அதன் இணையதளத்தில் கொரோனா அறிகுறிகளின் பட்டியல் அனைத்தையும் உள்ளடக்கியது அல்ல என்றும், கடுமையான அல்லது அவற்றைப் பற்றிய வேறு எந்த அறிகுறிகளும்  மக்களுக்கு தென்பட்டால் மருத்துவர்களை அணுக வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது.

ரூ.1000 விலையில் செப்டம்பர் மாத இறுதியில் கொரொனா தடுப்பூசி விற்பனைக்கு வரும்
ரூ.1000 விலையில் செப்டம்பர் மாத இறுதியில் கொரொனா தடுப்பூசி விற்பனைக்கு வரும் என மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவன தலைவர் உறுதி அளித்துள்ளார்.

செப்டம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி விற்பனைக்கு வந்து விடும் என்று உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவன  தலைவர் கூறி உள்ளார். இதன் விலை சுமார் ரூ .1,000 இருக்கும் என்று அவர் கூறினார்.

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகளுடன் இணைந்து கொரோனாவுக்கான தடுப்பூசியை தயாரித்து வருகிறது.

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைவர் ஆதார் பூனவல்லா கூறியதாவது:-

மே மாத இறுதிக்குள் நாங்கள் உற்பத்தியைத் தொடங்கி விடுவோம். செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திற்குள் முடிவடையும். இந்தியாவுக்கும் உலகத்துக்கும் கொடுக்கக்கூடிய ஒரு தயாரிப்பு எங்களிடம் இருக்கும்.

பெரும்பாலான விஞ்ஞானிகள் இரண்டு வருடங்கள் அல்லது குறைந்தபட்சம் 18 மாதங்களுக்கு முன்னர் ஒரு தடுப்பூசி சந்தையில் எதிர்பார்க்க முடியாது என கூறி உள்ளார்களே நீங்கள் எப்படி குறுகிய கால அவகாசத்னதில் தடுப்பூசி கிடைக்கும் என கூறுகிறீர்கள் என கேட்டதற்கு

பூனவல்லா ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகளுடன் கூட்டணி வைக்கும் வரை நீண்ட காலம் எடுக்கும் என கருதினோம்

தடுப்பூசி உற்பத்திக்கு  கோடஜெனிக்ஸ் மற்றும் பிற அமெரிக்க கூட்டாளர்களுடன் இருந்த  2021 வரை எடுக்கும் என்று நாங்கள் கூறியுள்ளோம், ஆனால் அதற்குப் பிறகு என்ன நடந்தது என்றால் சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் நாங்கள் இணைந்தோம் இது நிறைய முன்னேற்றம் அளித்துள்ளது.

ஆக்ஸ்போர்டு அணி மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. இது எபோலா வைரஸுக்கு தடுப்பூசி கொண்டு வருவதில் வெற்றி பெற்றது. மலேரியா தடுப்பூசிக்கு எங்கள் நிறுவனம் அவர்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது.

ஆக்ஸ்போர்டைத் தவிர,எனது நிறுவனம் அமெரிக்க நிறுவனமான கோடஜெனிக்ஸுடனும் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. இது அதன் தடுப்பூசியை உருவாக்க ஒரு நேரடி அட்டென்யூட்டட் வைரஸைப் பயன்படுத்துகிறது. அதனுடன் விலங்கு சோதனைகளை நடத்தி வருகிறது ஆனால் இது ஆக்ஸ்போர்டுக்கு இரண்டு மாதங்கள் பின்னால் உள்ளது.

சுமார் ரூ.1000 விலையில் சந்தையில் தடுப்பூசி கிடைக்கும். ஒரு துல்லியமான புள்ளிவிவரம் விரைவில் வழங்கப்படும் என கூறினார்.

ஆக்ஸ்போர்டின் தடுப்பூசியின் மனித சோதனை - உலகெங்கிலும் 100 க்கும் மேற்பட்டஇடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் 23 அன்று  மனிதர்களுக்கு செலுத்தும் பரிசோதனை தொடங்கியது. ஏழு பேரிடம் மருத்துவ பரிசோதனைகள் நடத்தபட்டது. அவற்றில் சில சீனா மற்றும் அமெரிக்காவில் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad