சென்னை,
நடிகர் விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் பல்வேறு இடையூறுகளை கடந்து தீபாவளியன்று தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளா உள்பட உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 700 தியேட்டர்களில் மெர்சல் படம் திரையிடப்பட்டது. ஒரே காம்ப்ளக்ஸ் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் திரையிடப்பட்டது. அங்கு கூட்டம் அலைமோதியது.
விஜய்யின் முந்தைய படங்களை விட மெர்சல் படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. இதனால் படம் வசூலில் சாதனை படைத்தது. முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.22 முதல் ரூ.24 கோடி வரை வசூலித்து இருப்பதாக வினியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மெர்சல் படம் திரையிடப்பட்ட அனைத்து நாடுகளிலும் வசூலை வாரிகுவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியவண்ணம் உள்ளது.
இந்த நிலையில், மெர்சல் படத்தை மிகப்பெரும் வெற்றிப்படமாக்கிய அனைவருக்கும் நன்றி என்று என்று நடிகர் விஜய் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள விஜய், “ Thank you for making #Mersal a Great success..
அனைவருக்கும் உள்ளம் கனிந்த நன்றிகள்” என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment
0 Comments