Type Here to Get Search Results !

விளையாட்டு ஜப்பான் ஓபன் பேட்மின்டன் சாய்னா, சிந்து முன்னேற்றம்



டோக்கியோ: ஜப்பான் ஓபன் சூப்பர் சீரீஸ் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட இந்தியாவின் நட்சத்திர வீராங்கனைகள் சாய்னா நெஹ்வால், பி.வி.சிந்து தகுதி பெற்றனர். முதல் சுற்றில் உள்ளூர் வீராங்கனை மினாட்சு மிடானியுடன் நேற்று மோதிய சிந்து 12-21 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார்.

பின்னர் சுதாரித்துக் கொண்டு அதிரடியாக விளையாடிய அவர் அடுத்த 2 செட்களையும் 21-15, 21-17 என்ற செட் கணக்கில் கைப்பற்றி 2வது சுற்றுக்கு முன்னேறினார். அதில் உலக சாம்பியன் நஸோமி ஓகுஹராவை எதிர்கொள்கிறார். மற்றொரு முதல் சுற்றில் சாய்னா 21-17, 21-19 என்ற நேர் செட்களில் தாய்லாந்தின் பொர்ன்பவீ சோச்சுவாங்கை வீழ்த்தினார். அடுத்து 2வது சுற்றில் ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரினை சந்திக்கிறார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் கிடாம்பி காந்த், எச்.எஸ்.பிரனாய் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad