Type Here to Get Search Results !

நமீதா சொல்லும் "பாதி உண்மை"!!!!

சென்ற வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய நமீதா இப்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாதி உண்மை என்ற தலைப்பில் ஒரு கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் நீங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை கவனிக்கவில்லை,பார்க்க மட்டும் தான் செய்துள்ளீர்கள் எனவும்  குறிப்பிட்டுள்ளார்.இதை அவர் கையால் எழுதி தனது  கையெழுத்தையும் போட்டுள்ளார்.
அந்த கவிதையில் அவர் குறிப்பிட்டவை,"நீ காலையில் சிரிப்போடு எழுவாய், ஆனால் உன்னை ஒரு பெண் தூண்டிவிட்டு ஆத்திரத்தை வரவழைப்பாள் சற்றே ஆசுவாசப்படுத்திக்கொண்டு அந்த நாளை தொடங்கலாம் என்று போவாய். அதே பெண் மீண்டும் அடிப்பாள் ஒரு முழு நாளை ஒரு மணி நேரமாகச் சுருக்க முடியும். ஆனால், அப்படிச் சுருக்கும்போது அதன் உண்மைகள் மாறும். இது பாதி உண்மை தான்.நீங்கள் அனைவரும் பார்த்த அந்தப் பாதியும் தப்பான பாதிதான். நீங்கள் என்னை ஜட்ஜ் பண்ணியது எனக்காகக் காட்டப்பட்ட வேடத்தைதான். அந்த நிகழ்ச்சி இயக்குநர்கள் ஏமாற்றுவதில் வல்லுநர்கள். உண்மைதான் உன்னை வெளிக்கொண்டுவரும், அதுவரை கம்பீர முகத்தோட சிரி. உங்களால் வரிகளுக்கிடையே உள்ள செய்தியைப் புரிந்துகொள்ள முடியும் என்றால் இதுவும் உங்களுக்குப் புரியும்" 


இவ்வாறாக அந்த கவிதையில் கூறப்பட்டுள்ளது.
நமீதாவின் பதிவு பிக்பாஸ் பற்றிதான் என்றும் அவர் கூறும் அந்த பெண் ஓவியாதான் என்றும் சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad