Type Here to Get Search Results !

ரஜினி ரஜினியாகவே நடிச்ச இந்தப் படங்களை பத்தியெல்லாம் தெரியுமா?

மாணிக்கம், பாட்ஷா, அருணாச்சலம், அண்ணாமலை, கபாலி என இன்று வரை பல எபிக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் ரஜினிகாந்த் அவராகவே நடித்த சில படங்களைப் பற்றியெல்லாம் தெரியுமா உங்களுக்கு? பார்ப்போம் வாங்க!

ரஜினி

பாவத்தின் சம்பளம் :




துரை இயக்கிய இத்திரைப்படம், சங்கர் கணேஷ் இசையமைத்து 1978-ல் வெளிவந்தது. ஆர். முத்துராமன், பிரமிளா, சுமித்ரா நடிப்பில் வெளிவந்த இந்தப் படத்தில், ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.



நட்சத்திரம் :




தாசரி நாராயண ராவ் இயக்கத்தில், சங்கர் கணேஷ் இசையில் 1980-ல் ஸ்ரீப்ரியா, மோகன் பாபு லீடிங் ரோலில் நடித்து வெளிவந்த திரைப்படம் இது. இதில் ரஜினியுடன் இணைந்து சிவாஜி, சாவித்ரி, நாகேஷ், கமல்ஹாசன், கே.ஆர்.விஜயா, மஞ்சுளா, ஸ்ரீவித்யா போன்ற பல நடிகர்கள் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர். அனைவரும் நடிகர்களாகவே வருவார்கள்.

நன்றி, மீண்டும் வருக :



மௌலி இயக்கத்தில், ஷியாம் இசையில், பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவில் 1982-ல் வெளியான திரைப்படம். பிரதாப் கே. போத்தன், சுஹாசினி, ஜெய்சங்கர் போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். இதில் இவர் பிரதாப்பிடம், ‘வாழ்க்கையில் மேலே போவதற்கு ஒரு பிடிப்புபோல் இருப்பதுதான்டா மேரேஜ்’ என்று சொல்லும் பன்ச் மிக ஃபேமஸ். ரஜினியுடன் சேர்ந்து ஜெயசித்ரா, ராதிகா, பூர்ணிமா ஜெயராம், சாருஹாசன், தேங்காய் சீனிவாசன், சில்க் போன்றவர்களும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர்.

அக்னி ‌சாட்சி :


கே.பாலச்சந்தர் இயக்கத்தில், எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் 1982-ல் வெளியான திரைப்படம். சிவக்குமார், சரிதா இப்படத்தில் லீடிங் ரோலில் நடித்துள்ளனர். இதில் ரஜினியுடன் இணைந்து கமல்ஹாசனும் நடிகராகவே நடித்துள்ளார். இப்படம் பாக்ஸ் ஆபீஸில் தோல்வியடைந்தாலும் சரிதா, இப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு ஸ்டேட் ஃபிலிம் விருதைப் பெற்றுள்ளார்.

அன்புள்ள ரஜினிகாந்த் :



கே. நட்ராஜ் இயக்கத்தில், இளையராஜா இசையில் 1984-ல் வெளியான திரைப்படம். இதில் குழந்தை நட்சத்திரமாகக் கலக்கிய மீனாதான் லீடிங் ரோல். இவருக்கு அம்மாவாக அம்பிகா நடித்துள்ளார். ஜெய்சங்கர், பாக்யராஜ், ராதிகா போன்ற நடிகர்களும் நடிகர்களாக நடித்துள்ளனர். இதில் ரஜினி தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். அவருக்கு நிகராக மீனாவும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளையும் பெற்றார்.

யார் :

சக்தி கண்ணன் இயக்கத்தில், வி.எஸ். நரசிம்மன் இசையில் 1985-ல் வெளியான படம். இதில் அர்ஜுன், நளினி, ஜெய்சங்கர் போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். தயாரிப்பாளர் தாணுவின் கோரிக்கைக்கேற்ப ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இப்படத்திற்குப் பின்தான் இயக்குநர் கண்ணன் `யார்' கண்ணன் என்று அழைக்கப்பட்டார். அர்ஜுனுக்கும் இப்படம் ஒரு திருப்புமுனையாக இருந்தது.

கோடை மழை :



முக்தா S. சுந்தர் இயக்கத்தில், இளையராஜா இசையில் 1986-ல் வெளிவந்த திரைப்படம்தான் கோடை மழை. வித்யா ஸ்ரீ, ஜெய்சங்கர், ஸ்ரீப்ரியா போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். ஒரு பள்ளி விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்க நடிகர் ரஜினிகாந்த், அவராகவே நடித்து மேடையில் பேசுவார்.

மனதில் உறுதி வேண்டும் :


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad